நிலைமொழி ஈற்று னகர வொற்றும் வருமொழி முதல் நகரத்தை ணகர வொற்றைப் போன்றே தன் இனமாகத் திரிக்கும். நின்னாய் என்பது இதற்கு உதாரணம் ஆகும் என்றவாறு. |
இவ்வெடுத்துக்காட்டால் இந்நூற்பா தனிக்குறில் பின்வரும் னகரத்திற்கே உரியது எனத் தெளிவாகிறது. மான் + நோக்கு = மானோக்கு; சேரன் + நாடு = சேரநாடு என வருவன இந்நூற்பா விதியோடு முரணுதல் காண்க. (148) |
149. | மகரஒற்று அதன்பின் கசதப வருங்கால் | | அவ்வவ் வொற்றாய் அவிர்தலும் வழங்கும்; | | சிங்கக் காளி, தங்கச் சேலை, | | மனத்திடம், களப்போர் எனும்நான்கு உதாரணம். |
|
நிலைமொழி ஈற்று மகரமெய் வருமொழி முதலாக வல்லினம் வந்தால் அவ்வின மெய்யாகத் திரிதலும் உண்டு. சிங்கக்காளி, தங்கச்சேலை, மனத்திடம், களப்போர் என்பவை நான்கும் இதற்கு உதாரணங்களாகும் என்றவாறு. |
“மவ்வீறு ஒற்றுஒழிந்து உயிர்ஈறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்”1 என்பதில் உள்ள வல்லினம் வரின் மிகுதல் இங்குக் கூறப்பட்டது. (149) |
150. | யகரமெய் அதன்பின் ஞகரவுயிர் மெய்வரின் | | அவ்வுடல் ஆதலும், இயைந்தவாறு அவிர்தலும் | | உடைத்து; மெஞ்ஞானமென்று உரைக்கும் சொல்லும் | | வாய்ஞானம் எனலும் வழங்கு உதா ரணமே. |
|
நிலைமொழி ஈற்று யகரவொற்றின்பின் ஞகரம் வந்தால் அம்மெய் ஞகரமாகத் திரிந்து புணர்தல், இயல்பாய்ப் புணர்தல் ஆகிய இரண்டும் உண்டு. மெஞ்ஞானம், வாய்ஞானம் என்பன இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. |
|