வாள் + நுதல் = வாணுதல் - ளகரமுன் நகரம் வந்து ணகரமாயிற்று. |
சூள் + மொழி = சூண்மொழி - ளகரமுன் மகரம் வந்து ணகரமாயிற்று. (151) |
152. | ஞகரஉயிர் மெய்யும் மகரஉயிர் மெய்என | | லளஒற் றுடன்உறீஇ னணமெய்கள் ஆகச் | | செய்யும்; உதாரணம் அகன்ஞாலம் எனலும் | | இவண்ஞானி தான்என்று இசைத்தலும் ஆமே. |
|
வருமொழி முதலில் உள்ள ஞகரம் நிலைமொழி ஈற்று லளக்களுடன் புணருங்கால், மகர மெய்யீற்றுப் புணர்ச்சியைப் போன்றே அம்மெய்களை னகர ணகர மெய்களாகத் திரிக்கும். அகன்ஞாலம், இவண்ஞானிதான் என்னும் மொழிகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. |
“லவ்வீற்றொடு தநஞய வருமாயின் திரிவுள”18 “ளவ்வீற்றதனொடு,,,,,,,,,,ஞம வந்து உறுங்கால் ஒண்ஞாங்கர் என்னச் செவ்வேண்மயில் எனத் திரிந்தே உறுமே”28 என இவ்விதி வேறிடத்தும் இவரால் கூறப்பட்டுள்ளது. |
இவள் + ஞானி = இவண்ஞானி (152) |
153. | மொழியீற்று மெய்யும் அவண்உள உயிர்மெய் | | உகரமும் தம்பின் யகரஉயிர் மெய்வரின் | | அவ்வவ் வருக்கத்து இகரமாய் அவிர்தரும்; | | அவனியாவன் எனலும், களிற்றியானை எனலும் | | உதாரணம் ஆகும்; குற்றிய லிகரம் | | என்றுஇதைப் புலவோர் இயம்புதல் மரபே. |
|
நிலைமொழியீற்று மெய்களும், உகரம் ஏறிய உயிர்மெய்களும் வருமொழி முதலாக யகரம் வரின் அந்தஅந்த வருக்கத்தைச் சேர்ந்த இகரமாகத் திரியும். இவ்வாறு திரிந்த இகரத் |
|