“ஆவிபின் தோன்றக் கெடும் குற்றுகரம்”1 “குற்றுகரம் ஆவிவரிற்சிதையும்”2 “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்”3 என்னும் நூல்விதிகளை ஏற்று “உகரத்து இடங்கவர்ந்து அதை ஒரீஇ” என்றார். முன் காட்டப்பெற்ற ஏழாமிலக்கண நூற்பாவிலும் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (154) |
|
155. | முற்றிய லுகரம் திரியாது வரும்உயிர் | | வகர வருக்கம் ஆதலும் சிறிதுஉள; | | பொதுவில், கடுவுணல் போல்வன உதாரணம். |
|
நிலைமொழி ஈற்று முற்றியலுகரம் உயிரெழுத்துகளுடன் புணருங்கால் திரியாமல் வகர உடம்படுமெய் பெற்று வருதலும் சிற்சில இடங்களில் உண்டு. பொதுவில், கடுவுணல் என்பன எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. |
முற்றுகரம் வருமொழிஉயிருடன் புணருங்கால் கெடுவதில்லை. எனவே, “இஈஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும்”4 என்ற பொதுவிதிப்படி வகர உடம்படுமெய் பெறுகிறது. இவர் இதனை வேறிடத்தே, “உகரம் ஈற்றுறு பதம் இரண்டு விதமாம் முற்றுகரம் எனவும் குற்றுகரம் எனவும்; அவற்றுள் முந்தியது உயிர்வரில் கேடுறாமையும் ஏனையது கெடுதலும் இயற்கையாகும்”5 என விளக்கியுள்ளார். ஆதலும் சிறிது உள என்ற உம்மையானே அதே, இதழகு, எதுயிர் எனச் சில முற்றுகரங்கள் உகரங் கெட்டு முடிவனவும் வழக்கில் உள என்பது பெறப்பட்டது. (155) |
156. | மகர மெய்ப்பின் வகரஉயிர் மெய்வரின் | | மகரக் குறுக்கம் ஆம்என வாய்பாடு; | | உதாரணம் வரும்வாழ்வு எனும்உரை ஆமே. |
|
நிலைமொழிஈற்று மகரவொற்றையடுத்து வருமொழி முதலாக வகரம் அம்மெய் தன்னளவில் குறைந்து மகரக்குறுக்கம் எனப்படும். |
|