காரணம் குறித்து வருவது எனப் பொருள் கொண்டு அஃதும் ஓர் குறிப்பால் அவிர்தரும் என்றார். அடுத்த நூற்பாவில் பொதுவாக இடுகுறி எனக் கருதப்படும் வேல் எவ்வாறு காரணப் பெயர் ஆகிறது எனக் கூறுகிறார். (194) |
30. | வகரம சத்தி; இல்எனல் உறையுள்; | | வகரமும் இகரமும் வேயாம்: ஆதலின் | | வேல்எனும் இடுகுறி விளங்கிற்று எனப்பலர் | | கருத்துக் கிசையக் கருதுகின் றனமே. |
|
வகரம் சத்தியைக் குறிக்கும் எழுத்தாகும். இல் என்றால் வசிப்பிடம் என்பது பொருள். வகரமும் இகரமும் இணைந்தால் வே ஆகும். எனவே வ + இல் வேல் ஆயிற்று. வேல் என்ற சொல் சத்தியின் உறைவிடம் எனப் பொருள் தந்து காரணப் பெயர் ஆயிற்று, பலர் இவ்வாறே கருதுகின்றனர். யாமும் அக்கொள்கையையே ஏற்றுக்கொள்கிறோம் என்றவாறு. |
திருவைந்தெழுத்தில் வகரம் சக்தியைக் குறிக்கும், “இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத் துள்”1 என்பதனால் இது தெரியப்படும். “அகரக் கூறும் இகரக் கூறும் தம்முள் ஒத்து எகரம் ஒலிக்கும்”2 என்பது நன்னூல் விருத்தி. வ + இல் = வேல் = சக்தியின் உறைவிடம் எனக் காரணப்பெயர். |
இங்கு இவ்வாறு கூறிய இவரே ஏழாமிலக்கணத்தில் “வெல்லும் தன்மையில் வேல் என விளம்பினர்”3 என்கிறார். அங்கே வெல் என்ற பகுதியில் இருந்து வேல் என்ற சொல் காரணப்பெயராயிற்று எனப்பட்டது. இவ்வாறு இவ்வொரே சொற்கு இவர் இரு காரணங்களைக் கூறுகிறார். (195) |
31. | னகர ஒற்று ஈற்றுஉறும் ஆண்பாற் பெயர்மிகை; | | பிரமன் பகவன குகன்சிவன் எனவே. |
|
|