| பெரும்பாலான ஆண்பாற் பெயர்கள் னகர ஒற்றைக் கொண்டு முடியும். பிரமன், பகவன், குகன், சிவன் என்பன உதாரணங்களாம் என்றவாறு. |
| மிகை என்றதனாலே சிறுபான்மை இவ்விதிக்கு விலக்கும் உண்டு என்பது பெறப்பட்டது. இது இந்நூல் 200, 204 ஆம் நூற்பாக்களில் கூறப்படும். (196) |
| 32. | ளகரஒற்று ஈற்றுஉறு பெண்பாற் பெயர்அணி | | | உமையாள் கலைமகள் என்பவை ஒத்தே. |
|
| ளகரஒற்றைத் தம் இறுதியாகப் பெட்றறு பெண்பாற் பெயர்களின் வரிசை உமையாள், கலைமகள் என்பவைகளைப் போன்றதாகும் என்றவாறு. |
| ஈற்றுஉறு அணி என்றதனானே உறாத அணியும் உண்டு என்பது பெறப்பட்டது. (197) |
| 33. | ரகரஒற்று ஈற்றுஉறு பன்மைப் பெயர்இசைவு | | | அடியார் பாவலர் ஆம்இவை போன்றே. |
|
| அடியார், பாவலர் என்பவைபோல உயர்திணைப் பன்மைப் பெயர்களுக்கு (பலர்பால்)ரகரமெய் கடைசியில் வருவது பொருத்தமாம் என்றவாறு. |
| இதற்கும் விதிவிலக்கு உண்டு. பின்னர் கூறப்படுகிறது. (198) |
| 34. | இகரமும் உகரமும் ஐமுதல் பிறவும் | | | அலிப்பால் பெயர்ஈற்று அணுகுதல் அமைவாம்; | | | வாரிதி முத்து மஞ்ஞை என்பவும் | | | மரம்கல் ஆதியும் ஆம்எனல் வழக்கே. |
|
| இ, உ, ஐ முதலிய மொழியீற்றெழுத்துகள் பலவும் அலிப்பால் பெயர்ச்சொல்லின் (ஒன்றன்பால்) கடைசியில் அமைதல் ஏற்புடைத்தே என்றவாறு, வாரிதி, முத்து, மஞ்ஞை, மரம், |