கல் போன்ற சொற்கள் இதற்கு உதாரணங்கள் ஆகும் என்றவாறு. |
பிறவும் என்று பொதுவாகக் கூறியதால் மொழியீற்று எழுத்துகள் அனைத்தும் கொள்ளப்பட்டன, கண், கோட்டான், காய், தளிர், தெவ், ஊழ், கவுள் எனப் பல்வேறு ஈறுகளும் வரையறையின்றி வரும். (199) |
35. | அஃறிணை போலும் உயர்திணைப் பெயர்கள் | | சிவைதிரு கணபதிமால் எனல் பலவே. |
|
சிவை, திரு, கணபதி, மால் போன்ற பல பெயர்கள் அஃறிணையைப் போன்ற (முறையே ஐ, உ, இ, மெய் ஈற்றைப் பெற்ற) உயர்திணைப் பெயர்கள் ஆகும். |
எனவே சொற்களின் ஈற்றை மாத்திரம் கொண்டு பெயர்களின் திணை, பால் வகுக்க முடியாது என்றாராயிற்று. பெரும்பான்மையான சொற்கள் பொதுவாக இந்த இந்த ஈற்றைக் கொண்டு விளங்குகின்றன எனக் கூறப்படுகின்றனவேயன்றி இவையே வரும் என விதி வகுக்கப்படவில்லை. (200) |
36. | உயர்திணைப் பன்மை போலும் அஃறிணை | | உம்பரும் செக்கரும் இடங்கரும் அனையவே. |
|
உம்பர், செக்கர், இடங்கர் போன்ற அஃறிணைப் பெயர்கள் (ரகர மெய்யை ஈறாகப் பெற்று) உயர்திணைப் பன்மைப் பெயர் போன்று (பலர்பால்) விளங்குகின்றன என்றவாறு. இடங்கர்-முதலை (201) |
37. | முப்பாற் பொதுப்பெயர் மூர்த்தி ஆ தியவே | | |
|
மூர்த்தி போன்றசில பெயர்கள் ஆண், பெண், அலி ஆகிய மூன்று பால்களிலும் பொதுவாக வழங்கப்படும் என்றவாறு. |