சொல்லிலக்கணம்146
இச்சொற்களை இவர் வினை எனினும், உண்டலை விரும்பான், உறங்கல் நன்று என்பனபோல் இவை பெயர்ச் சொற்களாகவே ஆளப்பெறும்.
தமிழ் இலக்கண மரபின்படி பொதுவினை என்ற குறியீடு தொழிற்பெயரை உணர்த்தாமல் தன்வினை, பிறவினை ஆகிய இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் வினைகளைக் குறிக்கும். எனவே இப்பெயராட்சி இந்நூலிற்கே உரியது,
(206)
42.வந்தேன் இருந்தேன் என்பவை முதலின
 தன்வினை ஆம்எனச் சாற்றுதல் வழக்கே.
வந்தேன் இருந்தேன் என்பனவற்றைப் போன்ற வினைச் சொற்களைத் தன்வினை எனக்கூறுதல் மரபாம் என்றவாறு.
(207)
43.வைதான் என்பதும், சிரித்தாள் என்றலும்,
 ஓடியது என்கையும், அன்னவை பலவும்
 முப்பாற் பிறவினை ஆம்எனல் முறையே.
வைதான், சிரித்தாள், ஓடியது ஆகிய சொற்களும் இவைபோன்ற பிறவும் (முறையே ஆண், பெண், அலி ஆகிய) முப்பால் பிறவினைகள் ஆகும் என்றவா.
பிறவினைச் சொற்களுக்கு மட்டும் பால்வரையறை காட்டியதால் தன்வினைச் சொற்களில் அது தெரியாது என்பது பெறப்பட்டது.
(208)
44.போயினன் என்றிடல் ஆதிய பிறவினை
 ஆயினும் தன்வினை ஆதலும் உடைத்தே.
போயினன் என்பதைப் போன்ற வினைகள் பெரும்பாலும் பிறவினையே ஆயினும், சிற்சில இடங்களில் தன்வினையாக வருதலும் உள என்றவாறு.