இச்சூத்திரத்தால் வினைச்சொல்வகை முடிக்கப்பட்டு இவ்வியல்பின் இறுதிப் பகுதியாகிய பல்வகைச் சொற்களுக்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படுகிறது. (215) | 4. பல்வகைச் சொற்கள் | 51. | செய்போ நில்எனல் ஆதிய யாவும் | | ஏவற் சொற்கள்என்று இயம்புதல் இயல்பே. |
| செய், போ, நில் என்பன போன்ற கட்டளைவினைகள் அனைத்தும் ஏவற்சொற்கள் என்றுகூறப்படும் என்றவாறு. (216) | 52. | வளர்ச்சி தளர்ச்சி அகலம்எனல் ஆதிய | | அமைதிச் சொல்என்று அறைவது முறையே. |
| வளர்ச்சி. தளர்ச்சி, அகலம் போன்ற சொற்கள் ஒரு பொருளின் அமைப்பைக் குறிப்பிடுவதால் இவை போன்றவற்றை அமைதிச் சொற்கள் எனலாம் என்றவாறு. | அமைதிச்சொல், தன்மைச்சொல், ஒப்புச்சொல், இரக்கச்சொல், கூட்டும் சொல், வியன் சொல், வெறுப்புச் சொல் என்றெல்லாம் இவர் பிரித்துப் பிரித்துக் கூறுவது அவற்றின் பொருள்வேறுபாடு காட்டவே ஆகும். இவைகள் கருவியாகவோ விதியாகவோ அமைந்து இலக்கணத்திற்குப்பயன்படுவதில்லை. பெயர், வினை, இடை, உரி என்ற முறையான பகுப்பில் இவையனைத்தும் அடங்கிவிடுகின்றன. (217) | 53. | இனிப்பு புளிப்பு கசப்பு கோபம் | | சாந்தம்எனல் ஆதிய தன்மைச் சொல்லே. |
| இனிப்பு, புளிப்பு, கசப்பு, கோபம், சாந்தம் என்பன போன்ற சொற்கள் ஒன்றன் குணத்தைக் குறித்தலால் இத்தகையன தன்மைச் சொற்கள் எனப்படும் என்றவாறு. (218) |
|
|