66. | மகிதலம் புகழ்மொழி அனைத்தும் மங்கலச் | | சார்பே; நூல்முகம் தனில்உறத் தகும்எனில் | | தமிழின்வித்து அனையவர் தணவார் அன்றே. |
|
“உயர்ந்தவர்களால் போற்றப்படுகின்ற சொற்கள் யாவுமே மங்கலத்தன்மை வாய்ந்தவை. எனவே அவை ஒரு நூலின் முதற்சொல்லாக இருக்கும் தகுதி வாய்ந்தனவே” என்றால் தமிழ்மொழியின் சாரத்தை அறிந்த அறிஞர்கள் அதை மறுக்க மாட்டார்கள் என்றவாறு. |
பாட்டியல் நூல்கள் நூல் முகப்பில் குறிப்பிட்ட சில சொற்களே வர வேண்டுமென்று வரையரை செய்துள்ளன. அக்கோட்பாட்டை மறுக்கும் முகத்தால் உயர்ந்தவர்களால் ஆளப்படுகின்ற சொற்கள் அனைத்தும் மங்கலச் சொற்களே என வலியுறுத்துகிறார். இதே கருத்து மறுபடியும் 233 ஆம் நூற்பாவில் தெளிவாக அநுவதிக்கப்படுகிறது. |
இங்கு மகிதலம் என்னும்சொல் ஆகுபெயராக உயர்ந்தோரை உணர்த்திற்-சொற்களின் தகுதி உணர்ந்தோர் அவரே ஆதலின். (231) |
67. | மங்கலச் சொல்லின் எழுத்துமூன்று ஐந்துஏழ் | | ஆகியும், ஈறு திரியாதும் அவிர்தரல் | | இனிதே; பிறழினும் எள்ளார் புலவர். |
|
ஓர் இலக்கியத்தின் முதற் சொல்லாகவரும் மங்கலமொழி மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எழுத்துகளைக் கொண்டதாகவும், புணர்ச்சியால் ஈறு திரியாததாகவும் இருந்தால் சிறப்பாம். அவ்வாறு அமையாவிடினும் அறிஞர்கள் இகழமாட்டார்கள் என்றவாறு. |
பண்டைக் காலத்தில் இல்லாமல், இடைக் காலத்தில் தோன்றி, இந்நூலாசிரியர் காலத்தே ஓரளவு காலூன்றிவிட்ட பாட்டியல் நூற்கருத்துகளை முற்றிலும் ஒதுக்காமலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமலும் இடைப்பட்ட ஒரு வழியைக் |