காண்கிறோம். உலகத்தோடு ஒட்ட ஒழுக வேண்டிய கடப்பாடுடைமையின் அவர் பொருட்டே உரைத்குதும் எனக்கொள்க. ஏகாரம் பிரிநிலை. இது எம் கொள்கையன்று உலகினர் கொள்கை என்றபடி. |
பகழிக்கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் “பூமாதிருக்கும்” எனத்தொடங்குகிறது. இதன் முற்சீராகிய ‘பூமாது’ என்ற சொல் ஈற்றில் திரிந்து பூமாதி என நிற்கிறது. மேலும் செந்தில் என்ற தலத்தின் இயற்பெயருக்கு பூ என்ற முதல் எழுத்து தானப்பொருத்ததில் “மரணம்” எனப்பெயரிய மிகக் கொடியதாகிறது. இவ்வாறு மங்கல வகையால் இந்நூல் குற்றமுடையதாயினும் தன் சொற்பொருட்சுவைச் சிறப்பால் இது நின்று நிலவுகிறது. இதனை இவ்வாசிரியரே தம் புலவர் புராணத்தில் எடுத்துக்காட்டுவதுடன் அங்கு இந்நூற்பாவையும் குறிப்பிடுகிறார். அவை வருமாறு: |
“ஆன்ற முப்பொறி மங்கலங் கடைதிரிந் ததுவும் |
கோன்றவன் ஊர்ப்பெயர்க்கு அமைதருபொருத்தத்தின் கொடிதும் |
வான்ற னைப்புரந் தான்அரு ளாற்றமிழ் வண்ணம் |
ஏன்ற வண்சுவை யான்மிக இனியவா யினவே”. |
“பொருத்த மாதிய சிலவகை மழையெனப் பொழியும் |
திருத்த மின்றிய வாய்க்கும்வண் சுவைபுகாச்செவிக்கும் |
வருத்த முங்களிப் புந்தரும் எனஅறு வகைய |
அருத்த மாரிலக் கணம்சொலற்கு |
ஈதொர்சான்றாமே.1 (234) |
70. | எவ்வகை எழுத்தும் ஒவ்வரை | | ஆகும்ஐந் தெழுத்துள் அடங்குதல் தேறி, | | ஆதிஅந் தம்புணர் விதம்அறிந்து அணிவான் | | பெயர்முதல் எழுத்தே நூல்முதல் என்னில் | | வாலை மற்றைய நான்கும் நிரைநெறிக் |
|
|