| பின்நேர் புளிமா ஆம்; இவை நான்கும் | | ஈர்அசைச் சொற்கள்என்று இயம்பிடல் இயல்பே. |
|
இரு நேரசைகள் இணைந்த சீர் தேமா ஆகும். இரு நிரை யசைகள் இணையின் அது கருவிளம் எனப்படும். நேர்நிரை யசைகளால் கூவிளச் சீரும், நிரைநேர் அசைகளால் புளிமாச்சீரும் தோன்றும். இந்நான்கும் ஈரசைக் சீர்கள் எனப்படும் என்றவாறு. |
இந்நூற்பாவிலும் சொற்கள் என்ற ஆட்சியைச் சீர்கள் என்ற பொருளிலேயே கொள்க. (241) |
77. | தேமா புளிமா இரண்டும்ஓர் இடத்தே | | காசு பிறப்புஎனக் கழறநிற் பனவே. |
|
தேமா, புளிமா ஆகிய இரு சீர்களும் (வெண்பாவின் ஈற்றுச் சீர் ஆகும்) ஓர் இடத்தில் (இரண்டாம் அசையாக உகரத்தைப் பெற்றுக்) காசு, பிறப்பு என்னும் வாய்பாடுடையனவாய் விளங்கும் என்றவாறு. (242) |
78. | ஈரசைச் சொல்லுடன் நேர்உறில் காய்என | | நிலைஉறில் கனியென நிகழ்த்தல்உண்டு; அவற்றை | | மூவசைச் சொற்கள் ஆம்எனல் முறையே. |
|
(தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் ஆகிய) நான்கு ஈரசைச். சீர்களுடன் மூன்றாவதாக ஒரு நேர் அசை சேர்ந்தால் காய் எனவும், நிரையசை சேர்ந்தால் கனி எனவும் கூறப்படும். இத்தகையவை மூவசைச் சீர்கள் என்று பெயர் பெறும். |
தேமாங்காய், தேமாங்கனி என்பது போல வரும். (243) |
79. | இணையசைச் சொல்லே ஒன்றோடொன்று இணைந்து | | நாலசை யாதலுண்டு; அம்முறை ஆம்கால் | | முன்மொழி இயல்பில் பிறழாது ஒழிந்த | | பின்வரும் நேர்நேர் தண்பூ, நிரைநிரை |
|