எனவும், மரபு வழிப்பட்ட வாய்பாடு எனவும் பெயர் பெற்று விடுதல் இயல்பே. எனவே அதுவும் திரிவே என்பது இவர்தரும் விளக்கம். (251) |
87. | வாழ்நனை வாணன் என்பது பற்றி | | வாய்பா டில்லா வழிக்கொடு திரித்துச் | | சொல்வது பிழைஎனத் துணிவுறத் தகுமே. |
|
வாழ்நன் என்ற சொல் இலக்கியங்களுள் வாணன் என வழங்கப்படுதல்பற்றி வாய்பாடின்றியும் பலவாறு சொற்களைத் திரித்துப் பயன்படுத்துதல் தவறாகும் எனத் தெளிய வேண்டும் என்றவாறு. |
வாழ் என்ற சொல்லோடு நன் என்னும் பகுதி சேர்ந்தால் வீரசோழியம் கூறும், “ஐம்மூன்றதாம் உடல் வன்மைபின் வந்திடில் ஆறொடைந்தாம் மெய்ம் மாண்பதாகும்; நவ்வரின் முன் அழிந்து பின் மிக்க ணவ்வாம்”1 என்ற விதிப்படி வாணன் என்றாகிறது. இந்நூலாசிரியர் இவ்விதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பது முன்பே கூறப்பட்டது.2 எனவே இத்தகைய புணர்ச்சிகளை (உதாரணம் - திகழ்+நாகம் = திகணாகம்; ஏழ்+திரை = ஏடிரை) இவர் வாய்பாடற்றதும் பிழையானது மான சொற்றிரிவுகள் எனக் கருதுகிறார். (252) |
|
88. | ஆல்உடைக் கடவுளை ஆல்என்று அறைதலும், | | முருகு நீங்கா முழுதுணர் புலவனை | | முருகுஎனப் பகர்தலும், மொய்குழல் வனிதையை | | மொய்குழல் என்றலும், அன்னவை பிறவும் | | அன்மொழி என்பார் அளவிலார்; அவைகட் | | பின்மொழி முன்மொழி விளக்கும் பெட்பால் | | இவ்விரு மொழிச்சார்பு எனத்திரித்து, இடம்அறிந்து | | ஒன்றொன் றாயே உரைப்பதுஎம் இசைவே. |
|
ஆலமரத்தின் நிழலிலுள்ள இறைவனை ஆல் எனக்கூறலும், இளமை (அல்லது அறிவு மணம்) நீங்காத இளைய |
|