ஆகுபெயர் எப்போதும் தனிச்சொல்லாக வரும். அல்லது சில இடங்களில் அடையடுத்து வரும். தாமரை ஆகுபெயர்; செந்தாமரை அடையடுத்த ஆகுபெயர். இதுவும் ஒரு சொல் நீர்மைத்தே. ஆனால் அன்மொழித்தொகை எப்போதும் சொற்றொடராகவே வரும். மொய்குழல், தேமொழி என்பனவே அன்மொழித்தொகைகளாம். |
அன்மொழித்தொகையில் பெரும்பாலும் பின்மொழியே கூறுபவனின் கருத்தை விளக்கும். முன்மொழி நிலையலாக அமையும் அன்மொழித்தொகைகள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தனவே. இது பற்றியே “பின்மொழி முன்மொழி விளக்கும் பெட்பால்” எனப் பின்மொழிநிலையலை முதலில் வைத்தார். |
“ஒன்று அலா மொழியில் பின்மொழி தொகுவது அன்மொழி என்பர் அவற்றின் உதாரணம் பொற்றொடி கார் குழல் வெண்ணகை எனலாம்; ஒருமொழி ஆகுபெயரோடு இவற்றைச் சொல்வார் உளர்; அது தொல்வழக்கன்று.”1 என்ற இவர் கருத்து இங்கு ஒப்புநோக்கத் தக்கது. |
இவர் காலத்தில் தமிழ் இலக்கண உலகில் ஆகுபெயர், அன்மொழித்தொகை பற்றிய ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருந்து. அச்சர்ச்சையின் பாதிப்பு அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் ஆகிய இருநூல்களின் அன்மொழித் தொகை பற்றிய நூற்பாக்களிலும் தெரிகிறது. |
இங்கு நால்வாய், பொற்றொடி, மொய்குழல், ஆல், முருகு, என்ற சொற்கள் தமக்கே உரிய பொருளில் வராது வேற்றுப் பொருள்தந்து நிற்றலின் இவை திரிவு எனக்கொள்ளப்பட்டன. (253) |
|
89. | கப்பணம் உம்மணி ஒருபணம் இருமணி | | ஆதல்போல் திரிவன ஆகு பெயரே. |
|
கப்பணம், உம்மணி போன்ற சொற்கள் முறையே ஒரு பணம், இரண்டுமணி என்பனவற்றைக் குறித்தாற்போலப் |
|