91. | வருவித்து உரைசெயும் மாற்றம் கூறில் | | எளிதில் தெளியுமாறு இசைக்க வேண்டும்; | | கூலிதந் தானிலை எனுஞ்சொற் கூறுவார் | | வேலைசெய் தமையை விளக்கும் முறையே. |
|
ஒரு செய்தியின் ஒரு பகுதியை உய்த்து உணர்ந்து கொள்ளுமாறு விட்டுவிட்டு மறுபகுதியை மாத்திரம் கூறுவதாயின் எளிதில் உணர்ந்து கொள்வதற்கேற்ற சொற்களால் கூற வேண்டும். கூலி தரவில்லை எனக்கூறினால் சொன்னவர் வேலைசெய்தார் என்பது எளிதில் விளங்குவது இதற்கு எடுத்துக்காட்டாம் என்றவாறு. |
கூலி என்ற சொல்லாலே வேலை செய்தமை எளிதில் உணரப்படும். அவனே பணம் தரவில்லை எனக் கூறினால் வாங்கிய தொகையைத் திருப்பித் தருதலா, கடன் தருதலா, கொடையா எனத் தெரியாமல் மயங்க நேரும். எனவே இவ்வாறு மயக்கந் தருமாறு சொல்லாட்சி அமையக்கூடாது. (256) |
92. | தன்கருத்து அல்லாப் பொருள்தரும் சொற்கள் | | நன்றுஅல; உதாரணம் நவில்வார் பலரே. |
|
சொல்லுகிறவன் எதை வெளிப்படுத்த எண்ணுகிறானோ அக்கருத்தைத் தெளிவாக உணர்த்தாமல் மாறுபட்ட பொருளைத் தருகின்ற சொற்களைப் பயன்படுத்தல் நல்லது ஆகாது. இவ்வாறு மயங்கப்பேசும் பலரை நாம், நம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். அவைகளையே எடுத்துக் காட்டாகக் கொள்க என்றவாறு. |
புலிகொல்யானை எனில் புலியால் கொல்லப்பட்ட யானையா அல்லது புலியைக் கொன்ற யானையா எனத் தெளிவாக உணர முடியாது. கூறுபவனின் கருத்திற்கு மாறாகவும் பொருள் கொள்ளப்படலாம். செய்யுட்களில் பல இடங்களில் அன்றே என்ற சொல் ஆளப்படும். அது அசைச் சொல்லா அல்லது |
|