ஐகாரத்தினால் இறும் இயல்பான யானை, வாழை போன்ற சொற்களைஅன்றித் தனியாக ஐ உருபு சேர்தலைக் குறிக்க மொழி ஈற்று ஐ வரில் என்றார். இது இரண்டாம் வேற்றுமை உருபு. (265) | 101. | அஃறிணைப் பன்மைச் சுட்டோடு அன்இன் | | ஐமுதற் பிறவரில் அற்றென இடைவரல் | | வாய்பாடு; உதாரணம் அவற்றன் இவற்றின் | | எவற்றை எனல்போன்று இசைப்பார் புலவோர். |
| பலவின்பால் சுட்டோடு அன், இன், ஐ முதலிய இடைச் சொற்கள் சேரும்போது அவைகளின் இடையே அற்று (ச் சாரியை) என ஒன்று தோன்றுதல் உண்டு. அவற்றின், இவற்றின், எவற்றை என்பன இதற்கு உதாரணங்களாம் என்றவாறு. | ஐ முதல் பிற என்றதனால் ஆல், ஓடு, உடன், கு ஆகிய உருபுகளையும் கொள்க “வவ்விறு சுட்டிற்கு அற்றுஉறல் வழியே”1 என்றது இதுவே. (266) | 102. | இல்எனல் உடைமையை உவமையை உயர்ச்சி | | தாழ்ச்சியை வினையைக் காட்டத் தகும்குறி; | | மதியில் மறுஎனல், பாலில்வெண் பொடிஎனல், | | அதில்நலம் இதில்இழிவு என்றிடல், அவையிற் | | பேசல் எனல்இவை பிறங்குஉதா ரணமே. |
| இல் என்னும் இடைச்சொல் உடைமை, உவமை, உயர்வு தாழ்வு, வினை ஆகியவற்றைக் காட்டும் அடையாளம் ஆகும். மதியில் மறு, பாலில் வெண்பொடி, அதில் நலம், இதில் இழிவு, அவையிற்பேசல் என்பன முறையே இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு. | மதியில்மறு என்பதனை மதியினுடையை மறு எனக் கொண்டு உடைமைப்பொருள் என்கிறார். மதியின் மறுஎனில் உடைமைப் | |
|
|