அறுவகையிலக்கணம்183
கால வினையைக் காட்டவும் தோன்றும்;
 உதாரணம் வேலும் மயிலும் என்கையும்,
 தெய்வமும் பொய்யோ, நானும்உய் வேனோ
 என்பவும், இரங்கும் என்றலும் ஆமே.
உம்மை ஒரு பொருளோடு மற்றொரு பொருளைச் சேர்த்துக் கூறவும், உயர்வையோ அல்லது தாழ்வையோ குறிப்பிடவும், எதிர்கால விகுதியாகவும் பயன்படுத்தப்படும். வேலும் மயிலும், தெய்வமும் பெய்யோ, நானும் உய்வேனோ, இரங்கும் என்பன முறையே இவற்றிற்கான உதாரணங்கள் ஆம் என்றவாறு.
வேலும் மயிலும்-எண்ணும்மை; தெய்வமும் பெய்யோ-உயர்வு சிறப்பு; நானும் உய்வேனோ-இழிவு சிறப்பு; இரங்கும்-எதிர்கால விகுதி. “எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே”1 என்பதில் சில இந்நூற்பாவில் இடம் பெற்றன.
(269)
105.ஏன்ஏம் ஓம்ஆம் என்பவை தன்தம்
 வினைக்குறிய ஆகுப; உதாரணம் விளம்பின்
 மறவேன் சென்றேம் வந்தோம் நின்றாம்
 என்னும்நான் மொழியும் ஆம்எனல் இயல்பே.
ஏன், ஏம், ஓம், ஆம் என்பவை தன்மை ஒருமை பன்மைகளுக்குரிய வினைமுற்று விகுதிகள் ஆகும். மறவேன், சென்றேம், வந்தோம், நின்றாம் என்னும் நான்கும் இதற்கு எடுத்துக்காட்டுகாளம் என்றவாறு.
ஏன்-தன்மை, ஒருமை வினைமுற்று விகுதி.
ஏம், ஓம், ஆம்-தன்மை, பன்மை வினைமுற்று விகுதிகள்
(270)
106.ஆள்அள் இரண்டும் ஆன்அன் ஆண்பாற்கு
 உறுதலில் பெண்பா லுடனுறும் அன்றே.