| | 11. | அணியிழை செந்நிறத்து ஆம்பல் மலர்வாய்க்கு |  |  | இதழ்ச்சுவை, சொல்லிசை, வெண்ணகை நிரைநயம் |  |  | இயற்கை; ஊடலில் இகழ்ந்தழல் ஏனைய. | 
 | 
	| நல்ல அணிகலன்களைப் புனைந்துள்ளவளாகிய நங்கையின் செவ்வல்வி மலரைப்போன்ற வாய்க்கு இதழ்களின் கனிச்சுவையும், இசையைப்போல் கேட்டாரை உவப்பிக்கும் சொல்லினிமையும், வெண்மையான பற்களின் வரிசையால் ஏற்படும் பொலிவும் இயற்கை அழகுகளாம். ஊடுங்காலை இகழ்ந்து கூறலும், அழுதலும் செயற்கைப் பண்புகளாம் என்றவாறு. (288) | 
| | 12. | புனையிழைப் பசுங்கிளி போலும் அங்கனை |  |  | கவுட்குஒளி இயற்கை; கமழ்ச்சியும் குறியும் |  |  | மஞ்சளொடு கணவன் வருவிப் பனவே. | 
 | 
	| சிறந்த அணிகளைப் பூண்டுள்ளவளாகிய பச்சைக்கிளியைப் போன்ற மங்கையின் கன்னத்திற்குப் பிரகாசம் இயற்கையாம். நறுமணம் மஞ்சளாலும், பற்குறி நகக்குறிகள் தலைவனாலும் ஏற்படும் செயற்கைச் சிறப்புகளாம் என்றவாறு. | 
| இது நிரல்நிரைப் பொருள்கோள். (289) | 
| | 13. | சேயிழைப் பூங்கொடி செவிக்குத் தலைவன் |  |  | திறல்கேட்டு உவகையைச் சிந்தையிற் பொருத்தல் |  |  | இயற்கை; இடுதொளை வளர்ச்சியொன்று இயற்கைநேர் |  |  | செயற்கை; மணிக்குகை, செம்பொன் ஓலைகள் |  |  | ஆடலும் மாறலும் செயற்கை ஆமே. | 
 | 
	| செம்மையான அணிகலன்களைப் பூண்ட பூங்கொடிபோல் வாளாகிய பெண்ணின் காதுகளுக்குத் தன் கணவனின் பெருமையைக் கேட்டு, அதனால் விளையும் மகிழ்ச்சியை மனத்தில் இருத்தி வைத்தல் இயற்கைக் குணமாம். பூண்களைப் பூட்டுவதற்காகச் செவிகளில் இடப்பட்ட தொளைகள் நாளடைவில் பெரிதாவது இயற்கையைப் போன்ற செயற்கையாம், மணிகள் |