காலம்அறிந்து கலவிப்போர் புரிதலும் இயல்பான பண்புகளாம். அணிகலன்களும், வாசனைச் சாந்தும், எழுதப்பெறும் தொய்யிற் சித்திரங்களும் செயற்கையாகச் செய்யப்படும் புனைவுகளாம் என்றவாறு. |
“வாவியுறை நீரும் வடநிழலும் பாவுஅகமும் ஏஅனைய கண்ணார் இளமுலையும் ஓவியமே மென்சீத காலத்துவெம்மை தரும்; வெம்மைதனில் என்புஆரும் சீதளம் ஆமே”1 ஆதலின் குளிர்ச்சியும் வெப்பமும் ஒருங்கே கூறப்பட்டன. (292) |
16. | மென்மையும் வேய்முளை போலும் விளக்கமும் | | இயற்கை; ஆதலில் தொய்யில்மற்று ஏனை | | சுரிகுழற் காரிதன் சுந்தரத் தோட்கே. |
|
சுருண்ட கூந்தலைஉடைய மங்கையின் அழகிய தோள்களுக்கு மிருதுத் தன்மையும், மூங்கில் முளையைப் போன்றுள்ள ஒளியும் மட்டுமே இயற்கைப் பொலிவாம். எனவே வாசனைக் குழம்பால் வரையப்படும் சித்திரஙகள் முதலயன செயறகைப் பு¬வுகளே எனறவாறு. |
ஏனை என்றது இயற்கை அல்லாn செயற்ஙையை. (293) |
17. | மலர்தலும் குவிதலும் செம்மையும் மயில்அனாள் | | அங்கைக் குணமே; அணிவளை அம்மனை | | கழங்குஇவை ஒவ்வொரு காலத்து உறுபவே. |
|
மயில்போன்ற சாயலைஉடைய மடந்தையின் அழகிய கரங்களுக்கு விரிதலும், குவிதலும் எப்போதும் நிலைத்துள்ள பண்புகளாகும். வரிசையாக அடுக்கப்படும் வளையல்கள், ஆம்மானைக்காய், கழங்கு ஆடும் காய் போன்றவைகள் சிற்சில பருவங்களுக்கு மட்டுமே உரியனவாகும். |
அணிவளை என்பதனை வினைத்தொகையாகங் கொண்டு அணியப்பேற்ற வளையல்கள் ஏனினுமாம். (294) |
|