திறம்”1 என முற்றிலும் வேறுவிதமாகக் கூறுகிறது. நவநீதப் பாட்டியலும் வெண்பாப் பாட்டியல் கருத்தையே கூறுகிறது.2 இவ்விரு பாட்டியல் நூற்கருத்துக்கும் இவ்வாசிரியர் கருத்திற்கும் அரிவைப்பருவம் ஒன்றில்தான் ஒற்றுமை உள்ளது. |
பல அரிய செயல்களைச் செய்யும் வலிமைமிக்க ஆடவரையும் தம் வனப்பால் நெகிழச் செய்வதாலும், தம்பாலுள்ள இவ்வியற்கை ஆற்றலை உணர்ந்து கொள்ளும் பருவத்தினர் ஆனதாலும் முலைகள் ஆடவர் மொய்ம்பினும் உயர்வெனக் கருதுவர். அது பெருமிதம் ஆதலின் உரையில் அவ்வாறு உரைக்கப்பட்டது. (304) |
28. | பேசலும் கலவியிற் பிணங்கா இயற்கையும் | | பாலுடைச் சரிமுலைப் பசுநரம்பு அவிர்ச்சியும் | | ஆடலில் வெறுப்பும் அனையன பிறவும் | | பேரிளம் பெண்ணின் பெட்புஎனத் தகுமே. |
|
அதிகமாகப் பேசுதலும், மெய்யுறு புணர்ச்சியின்போது ஊடாத இயல்பும், பால் சுரக்கின்றனவும், சரிந்தனவுமாகிய நகில்களில் பச்சை நரம்புகளின் தோற்றமும் (கழங்கு, ஊசல். அம்மானை, புனல் போன்ற) விளையாட்டுகளில் விருப்பமின்மையும், இவை போன்றபிற தன்மைகளும் பேரிளம்பெண்ணின் பண்பு நலன்கள் எனலாம் என்றவாறு. |
தெரிவைப் பருவத்தைக் கடந்தவள் பேரிளம்பெண். ஆதலின் வயது வரையறை கூறவேண்டாவாயிற்று. நாற்பது வயதுடையாள் பேரிளம்பெண் என வகுத்துக் கொண்டால் நாற்பத்தைந்து வயதினைள என்னென்பது? ஆகவே தெரிவை நிலையைத் தாண்டியவள் பேரிளம்பெண் எனக் கோடலே தக்கதாம். |
ஆடலில்வெறுப்பு என்பதற்குக் கலவியின் புறச்செய்கைகளில் அதிக நாட்டமின்மை என உரைப்பினும் ஆம். (305) |
|