கூடல், கூடல் நிமித்தம் என்றால் மற்ற நால்வகை நிலத்தில் அஃது இல்லையென்றா பொருள்? முல்லை நில மகளிர் ஆயுட்கால முழுவதும் தம் காதலரைப் பிரிந்து ஆற்றியிருந்து வருகிறார்களா? நெய்தல் நிலப் பெண்களுக்கு இரங்கி இரங்கிச் சாவதைத் தவிர வேறு கதியே இல்லையா? |
கதைமாந்தரின் உணர்ச்சிகளாகிய அகப்பொருளை வெளிப்படுத்த இந்த ஐவகை நிலப்பாகுபாடு பெரிதும் உபகாரப்பட்டபோதிலும் இவை அகப்பொருளாக மாட்டா. அகப்பொருள் முற்றிலும் நுட்பமானவை. பருப்பொருள்கள் அனைத்தும் - தலைவன், தலைவி ஆகிய இருவரின் உடல் நீங்கலாக-புறப்பொருளாகவே கொள்ளற்பாலனவாம். |
இது பற்றியே இவ்வாசிரியர் பிறிதோரிடத்தில், “மலை வளமும், கடல்வளமும் முதலா வயங்குபுறப் பொருள் அமைப்பும், மங்கைநல்லார் கும்ப முலைவளமும் தலைவளமும், நிலைவளமும், பிறவும் மொழியும்அகப் பொருள் வியப்பும்”1 எனக் கூறுகின்றார். (334) |
58. | வான்தவழ் குடுமி வரைகளும் பறம்புக் | | கூட்டமும் குறிஞ்சி; கொள்வார் முனிவரும் | | வேடரும்; விளைவன தினையும் கிழங்கும்; | | பொலிவன அருவியும் பொழிலும் ஆதிய; | | வளம்எலாம் விரிக்கிலம்; ஆயினும் மற்றும் | | சிறிதுஉள வியன்அவை செப்புதும்; என்எனில் | | எவ்வகைத் தெய்வமும் ஆகி எம்மது | | முருகோன் நடம்இடும் முறைமைநன்கு உணரார் | | தம்தேவு உளதுஎனத் தனித்தனி வரலும் | | யாம்அது கண்டுஉவப்பு எய்தலும் ஆமே. |
|
மேகங்கள் உலவுமளவு உயர்ந்த சிகரங்களை உடைய பெருமலைகளும், சிறிய குன்றுகளின் தொகுதிகளும் குறிஞ்சி எனப்படும். இதனைத் தம் வாழிடமாகக் கொள்பவர்கள் தவ |
|