67. | ஒருநிலத்து உறுவன மற்றொன் றிடத்தில் | | புகுவதுஉண்டு; அம்முறை புகல்வதும் இயல்பே. |
|
ஒரு பிரிவாகிய நிலத்திற்கே சிறப்பாக உரியதாகிய கருப் பொருள்கள் வேறொரு நிலத்திலும் காணப்படலாம். அவ்வாறு இடம் மாறி விளங்குவதைப் புலவர்கள் விளக்கிப் பாடுவதும் மரபே என்றவாறு. |
|
ஒரு திணைக்குரிய கருப்பொருள்கள் வேறு திணையில் விளங்குவதைப் பாடுவதற்கு திணை மயக்கம் எனப்பெயர் (344) |
68. | நிலத்துஇயல்பு இவ்வணம் நிகழ்த்தினம்; இனிச்சிறிது | | உழிஇயல்பு உரைக்குதும் உணர்ந்த வாறே. |
|
ஐவகை நிலத்தின் இயற்கைத் தன்மைகளை இவ்வாறு கூறி முடித்தோம். அடுத்துப்பலவகையான மக்களின் வாழிடங்களைப் பற்றி யாம் அறிந்த படி சொல்வாம் என்றவாறு. |
இந்நூற்பாவால் இப்பிரிவு நிறைவு செய்யப்பட்டு அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது. (345) |
நிலத்தியல்பு முற்றிற்று |
2. உழி இயல்பு |
உழி-இடம்; இங்கு இருப்பிடத்தைக் குறித்து நின்றது. இவ்வியல்பில் தவசிகள், நால்வருணத்தோர் வாழிடங்களில் காணப்படுவனவும், போர்க்களம், புலவர்அவை போன்றவைகளும் கூறப்படும். இவ்வியல்பு பதினொரு சூத்திரங்களைக் கொண்டது |
69. | தவத்தோர் உறையுளில் தண்டொடு கமண்டலம் | | கோவணம் மரவுரி குலவுகல் லாடை | | வெண்ணீறு அணிமணி வேடர்கண்டு உரித்த | | கொல்லாப் புலித்தோல் ஆதிய குலவுமே. |
|