அம்போ போரிற் பயன்படாதாதலின் இவற்றைப் பிரித்துக் கூறல் பொருந்தாது. விசயன் சிவபெருமனை வில்லால் அடித்தது விதிவிலக்கு. அது போர் அறம் ஆகாது. (374) |
98. | துலையொடு குன்றியும் எவ்வகை நிறைநிலை | | தனக்கும் கருவிகள் ஆம்எனத் தகுமே. |
|
தராசும் குன்றிமணியும் அனைத்துவகையான நிறுத்தி அளத்தலுக்கும் கருவிகளாகும் என்னலாம் என்றவாறு. |
குன்றிமணி பொன் நிறுத்தப் பயன்படும் ஓர் அலகு நிறையாகும். பெரிய எடைகளும் இதன் பெருக்கமே ஆதலின் இது எவ்வகைக்கும் ஆம் எனத்தகும் என்றார். இன்றும் ஒரு கிராம் என்பதை அலகாகக் கொண்டே மெட்ரிக் டன் வரை பெருக்கிக் கொள்கிறோம். (375) |
99. | செம்பொடு வெள்ளியும் பொன்னும் சிறியவர் | | செருக்குஎனும் பயிர்மிகச் செய்வன ஆமே. |
|
செம்பு, வெள்ளி, பொன் இவற்றாலான நாணயங்களும், பொருள்களும் தகுதியிற் குறைந்தவர்களுக்குத் தற்பெருமையை மிக அதிகமாக வளரச்செய்யும் கருவிகளாம் என்றவாறு. |
இங்கு உலோகத்தின் பெயர்கள் அதனாலானவற்றிற்கு ஆகி வந்தன. கல்வி, ஒழுக்கம் போன்றவைகளால் தகுதியடையாத பூரியார்கண் உள்ள பொருட் செல்வம் அவர்களுடைய இறுமாப்பிற்குக் காரணமாகிறது என்கிறார். உலோகங்கள் அவற்றின் விலைமதிப்பின்படி வரிசைப்படுத்தப்பட்டன. (376) |
100. | நெல்முதல் விளைவன பலவும் நீள்நிலத்து | | உயிர்த்தொகை வளர்த்துஅருள் உயர்கரு விகளே. |
|
நெல் முதலாக நிலத்தில் விளையும் பலவகையான பயிர்களும் பெரிய உலகில் உள்ள பல உயிர்க் கூட்டங்களையும் வளர்க்கும் சிறந்த கருவிகள் ஆகும் என்றவாறு. |