இவ்வியல்பில் சில புறப்பொருள்கள் தொகுத்து உரைக்கப்பட்டுள்ளன. நில உலகம், தமிழ்நாடு, இந்துசமயம் ஆகியவற்றிற்குப் புறம்பானவையும், ஓரிரு சமயக்கருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இவ்வியல்பு ஏழு நூற்பாக்களைக் கொண்டது. |
105. | கதிர்மதி, உடு, முகில் ஆதிய கவின்தரும் | | வானத்து உரைசெயும் வகைஎலாம் புறமே. |
|
சூரியன், சந்திரன், விண்மீன்கள், மேகம் ஆகியவை விளங்குகின்ற ஆகாயத்தில் உள்ளதாகக் கூறப்படுவன யாவும் புறப்பொருள்களேயாகும் என்றவாறு. |
ஆதிய என்றது மற்ற கோள்களையும், பிற மேல் உலகங்களையும் ஆம். இவ்வியல்பில் புறம் என்ற சொல் நமக்கு பருப்பொருளாகவோ அல்லது நுண்பொருளாகவோ-அப்பாற்பட்டது என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. (382) |
106. | பாழியந் தடக்கைப் பகட்டுஇனம் பாம்பினம் | | அமர்தரும் அதலம் ஆதியும் புறமே. |
|
(இந்நிலவுலகைத் தாங்கிக் கொண்டு இருப்பதாக நம்பப்படும்) வலியனவும் எழிலுடையனவும் பெரியனவும் ஆகிய துதிக்கைகளை உடைய (எண்டிசை) யானைகளும், நாகங்களும் வாழ்கின்ற அதலம் முதலிய கீழேழு உலகங்களும் புறமேயாம் என்றவாறு. |
அதலம் ஆதிய என்றது அதல, விதல, சுதல, தராதல, ரசாதல, மகாதல, பாதலம் ஆகிய கீழேழ் உலகங்களை. (383) |
107. | பிறமொழித் தேயமும் பிறங்கும் எண்டிசைப் | | பாலர்தம் ஊரும் பகர்புறப் பொருளே. |
|