லையே பகுத்து நோக்கும் போது அதற்குள் ஐம்பூதக் கூறுகளும் இருப்பதால் அவை அகப்பொருளாகவும் ஆகின்றன. எனவே இவற்றை இவ்வாசிரியர் பொதுவான பொருள் என்ற அர்த்தத்தில் அகப்புறப்பொருள் என்றார். (389) |
113. | கதிர், மதி உடல்தொறும் கண்கள் ஆதலின் | | அவைகளும் அகப்புறப் பொருளாம் அன்றே. |
|
ஞாயிறும் திங்களும் ஒவ்வொரு உடலிலும் கண்களாகப் பொலிதலால் அவையும் பொதுவானவையே என்றவாறு, |
இரு சுடரையும் கண்களாகக் கொள்வதும் சமயநூற் கொள்கை. மேலே கூறிய அதே காரணத்தால் இவையும் அகப்புறப்பொருளாயின. ஞாயிறு மதிகளாக இருக்கும் இயல்பு வேறு; கண்களாக உள்ள நிலை வேறு என இவற்றின் இலக்கணங்களும் வேறுபட்டுள்ளன. (390) |
114. | பொறியும் சத்தமும் புறத்தோடு அகத்தும் | | உள்ளன வாம்என்று உரைத்திடத் தகுமே, |
|
செவி, உடம்பு, விழி, நா, மூக்கு எனும் அறிகருவிகளான ஐம்பொறிகளும் முறையே இவற்றிற்கு விஷயமாகிய ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்னும் ஐம்புலன்களும் உடலுக்கு வெளியேயிருப்பதோடு உள்ளும் இருப்பனவாகும் என்று சொல்லத்தகும் என்றவாறு, |
ஞானேந்திரியங்கள் எனப்படும் அறிகருவிகள் புறத்தே உள்ள பொருள்களோடும் அகத்தே உள்ள மனத்தோடும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்கின்றன, இவ்வாறே ஓசை முதலிய புலன்கள் புறத்தில் இருந்தாலும் அறிகருவிகளால் துய்க்கப்பட்டு அகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன, இக்காரணம்பற்றியே இவை பொதுப்பொருள் ஆயின. |
இந்நூற்பாவில் சத்தம் என்றது ஐம்புலன்களுக்கும் உபலட்சணம், இங்கும் ஐம்பொறிகளும் துயில்நிலையில் சடமாகவும் |