இவ்வாசிரியப்பா ஒன்பதாகிய ஒற்றைப்படை அடிகளைப் பெற்று வந்தது. |
இதிலிருந்து ஆசிரியப்பாவிற்கு அகவலோசையே இன்றியமையாத இலக்கணம் எனவும் மற்ற தொடை நயங்கள் இருக்குமளவு சிறப்படையும் எனவும் கொள்ளலாம், இஃது இவ்வியல்பு ஏழாம் நூற்பாவில் தழுவிக் கொள்ளப்படுகிறது. (404) |
நிலைமண்டில் ஆசிரியப்பா |
6. | ஈற்றுஉறும் அடிக்கு முந்திய அடியில்ஈர் | | அசைகுறைவு ஆகிய வேற்றுமை ஒன்றே | | அணைவுறும் நேரிசை யகவற் பாவே | | நிலைமண் டிலம்என நிகழ்த்தும் அகவலே. |
|
ஈற்றயல் அடியில் இரண்டு அசைகள் (ஒருசீர்) குறைதலாகிய ஒரு வித்தியாசத்தைமட்டும்உடைய நேரிசையகவல் நிலைமண்டில் ஆசிரியப்பா என வழங்கப்படும் என்றவாறு. |
முன்பே கூறியதுபோல் பிற ஆசிரியர்களால் நேரிசை என வழங்கப்படுவதை இவர் நிலைமண்டிலம் என மாற்றியழைக்கிறார். பாடல் முடிவடையும்போது ஒரு சீர் குறைவதாகிய மண்டிலம் (வளைவு) பெறுவதால் இதனை இவ்வாறு வழங்குகிறார் போலும். (405) |
7. | இருவகை அகவலும் எதுகை மாறி | | ஒற்றைத் தொகைபடும் அடியினது ஆகி | | மோனைகெட்டு அங்ஙனம் எதுகை நின்று | | வரினும் கொள்வது வண்தமிழ் இயல்பே. |
|
நேரிசை, நிலைமண்டிலம் ஆகிய இரண்டுவகை ஆசிரியப்பாக்களும் எதுகை இல்லாமலும் ஒற்றைப்படை அடிகளை உடையனவாகவும் மோனை இல்லாமல் அவ்விடத்தில் எதுகை வந்திருந்தாலும் அவற்றைத் தழுவி ஏற்றுக்கொள்வது தமிழ் இலக்கியமரபாம் என்றவாறு, |