நேர் என முடிகின்ற மூன்றசைச் சீர்களாகிய காய்ச்சீர்களும் ஈரசையானியன்ற ஆசிரிய உரிச்சீர்களும், தனியாகவரும் ஓரசையும் வெண்பாவிற்கு உரியனவாம் என்பர் புலவர் என்றவாறு. |
|
இவர் தளைகளைப் பற்றியே கூறவில்லை. வெண்பாவில் வெண்டளை அமைதல் அப் பெயரின்றியே இப் பகுதியின் பதினைந்தாம் நூற்பாவில் கூறப்படுகிறது. இங்கு வெண்பாவில் பயின்றுவரும் சீர்கள் இவையிவை என்று கூறப்பட்டன. (412) |
14. | வெண்பா ஈற்றே வருவதுஓர் அசைச்சொல் | | அவ்வயின் வராதது மூன்றசைச் சொல்லே, |
|
வெண்பாவின் ஈற்றுச்சீராகவே வருவது ஓரசைச்சீராம், மூவசைச் சீர் வெண்பாவின் ஈற்றில் வராது என்றவாறு, |
ஈற்றே வருவது ஓர் அசைச்சொல் என்றதனானே பிற இடங்களில் வராது என விலக்கப்பட்டது. எந்நிலையிலும், ஈற்றில் மூவசைச்சீர் வாரா எனவே (குற்றியலுகரஞ் சேர்ந்த) ஈரசைச்சீர்கள் வரும் என்பது பெறப்பட்டது, (413) |
15. | உரிய மூன்றசைச் சொல்லொடும் பின்நிரை | | ஆய ஈரசைச் சொல்லொடும் நேர்வரும்; | | பின்நேர் உளஇரண்டு அசைச்சொல் லோடு | | நிரைவரும் வெண்பா நிலைஉணர் காலே. |
|
வெண்பாவின் தன்மையை ஆராய்ந்தால் அதற்கே உரிய மூன்றசைச்சீராகிய காய்ச்சீருக்குமுன்னும், நிறையசையால் முடியும் ஈரசையாகிய விளச்சீருக்கு முன்னும் நேரசைவரும். நேரசையால் இறும் ஈரசையாகிய மாச்சீருக்கு முன்னால் நிரையசை வரும் என்றவாறு, |