ஒருவிகற்பம்:- |
அரிய சமயங்கள் அத்தனையும் போற்றும் |
பெரிய குருபரனைப் பேசுங்கால் யாரும் |
தெரிய மலைதோறும் சென்றுதினம் ஆடற்கு |
உரியவனாம் சென்னைநக ரோன்,1 |
இருவிகற்பம்:- |
இவ்வுலகத் தின்பம்உவர்த் தெஞ்ஞான்றும் பூமகள் கோன் |
அவ்வுலகத் தின்ப மதுவே விருப்புற்றார் |
முந்நீர் வளாக முழுதுறிலும் வாய்க்கொள்ளார் |
உய்ந்நீர வல்லா வுரை.2 |
பலவிகற்பம்:- |
கண்ணனருள் பெற்றார்நற் கல்வியே செல்வமெனக் |
கொல்லா விரதங் குறிக்கொள்ப வேறுசிலர் |
தீக்கொலையிற் செய்பொருளே செல்வமென நின்றன ரால் |
என்னே வுலகியற்கை யென்.3 (419) |
பஃறொடை வெண்பா |
21. | நேரிசை வெண்பா வேணமட் டடுக்கி | | இடைதொறுந் தனிச்சொல் இசைவுறப் பொருத்தல் | | பஃறொடை வெண்பா ஆகும்; இதனைக் | | கலிவெண் பாவெனக் கழறுநர் உளரே, |
|
நேரிசை வெண்பாக்களைத் தங்கள் உளங்கொள்ளுமளவும் அடுக்கிக் கொண்டே போய் இருவெண்பாக்களின் இடைகளில் எல்லாம் எதுகையும் தளையும் பொருந்துமாறு தனிச்சொற்களைப் பெய்வதால் உண்டாகும் பா பஃறொடை வெண்பா ஆகும். சிலர் இதனைக் கலிவெண்பா என்றும் கூறுவர் என்றவாறு. |
|