| ஒருவிகற்பம்:- | 
| அரிய சமயங்கள் அத்தனையும் போற்றும் | 
| பெரிய குருபரனைப் பேசுங்கால் யாரும் | 
| தெரிய மலைதோறும் சென்றுதினம் ஆடற்கு | 
| உரியவனாம் சென்னைநக ரோன்,1 | 
| இருவிகற்பம்:- | 
| இவ்வுலகத் தின்பம்உவர்த் தெஞ்ஞான்றும் பூமகள் கோன் | 
| அவ்வுலகத் தின்ப மதுவே விருப்புற்றார் | 
| முந்நீர் வளாக முழுதுறிலும் வாய்க்கொள்ளார் | 
| உய்ந்நீர வல்லா வுரை.2 | 
| பலவிகற்பம்:- | 
| கண்ணனருள் பெற்றார்நற் கல்வியே செல்வமெனக் | 
| கொல்லா விரதங் குறிக்கொள்ப வேறுசிலர் | 
| தீக்கொலையிற் செய்பொருளே செல்வமென நின்றன	ரால் | 
| என்னே வுலகியற்கை யென்.3 (419)  | 
பஃறொடை வெண்பா  | 
| 21. | நேரிசை வெண்பா வேணமட் டடுக்கி |  |   | இடைதொறுந் தனிச்சொல் இசைவுறப் பொருத்தல் |  |   | பஃறொடை வெண்பா ஆகும்; இதனைக்  |  |   | கலிவெண் பாவெனக் கழறுநர் உளரே, |  
  | 
	| நேரிசை வெண்பாக்களைத் தங்கள் உளங்கொள்ளுமளவும் அடுக்கிக் கொண்டே போய் இருவெண்பாக்களின் இடைகளில் எல்லாம் எதுகையும் தளையும் பொருந்துமாறு தனிச்சொற்களைப் பெய்வதால் உண்டாகும் பா பஃறொடை வெண்பா ஆகும். சிலர் இதனைக் கலிவெண்பா என்றும் கூறுவர் என்றவாறு. | 
|