“முகட்டளை, கலம்பகம், சமநடை, சமவியம், மட்டவிழ் குழபலினாய் மயூர சமவியம் ஒட்டினார் எழுத்தினால் ஒட்டி ஒண்டமிழ்க்கு இட்டமாய் அவர்கள் வெண்பாவின் பேர்களே”1 என்பது அந்நூற்பா. |
இவ்வாறு பலவகையாகப் பிரித்துக் கூறப்பட்டாலும் அவை அனைத்தையும் ஒரோ வகையால் இவ்வைந்தினுள் அடக்கி விடலாம் என்பது இவர் கருத்து. |
இவர் எதுகையை யாப்பின் இன்றியமையாத அங்கமாகவே கொள்வதால் பல விகற்ப வெண்பாக்களைச் சிறந்தனவாக ஏற்றுக் கொள்வதில்லை, இவரால் இயற்றப்பெற்ற இன்னிசை வெண்பாக்கள் அனைத்துமே - இவ்வுரையாசிரியனின் அறிவுக் கெட்டியவரையில் - ஒரு விகற்பத்தான் இயன்றனவே, எதுகை, மோனை இரண்டுமே உரிய இடத்தில் நன்கு அமைந்தது தான் யாப்பின் சரியான வடிவம் என்பது இவர் கொள்கை. இஃது அடுத்த நூற்பாவில் கூறப்படும். (421) |
23. | தளைப்பிழை இன்றிப் பொருளொடு திகழுறும் | | வெண்பா மோனையும் எதுகையும் பிறழினும் | | தவிரினும் ஒப்புவர் தக்கோர்; ஆயினும் | | மதுரம் குன்றிடும் என்பது வழக்கே. |
|
வெண்டளை பிழையாமல் நல்ல பொருளமைதி வாய்ந்த வெண்பா எதுகை, மோனை ஆகிய இரு தொடை நயங்களும் பெற்று வராதிருப்பினும் பெரியவர்கள் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொள்வர். என்றாலும் அவை இனிமையில் குறைபாடுடையன என்பதே மரபாம் என்றவாறு, (422) |
24. | குறில்தனி வரும்அசை சீர்ஈற்று அன்றி | | வாரா இயற்கையும், குற்றிய லிகரம் | | கொள்ளலும் தள்ளலும் ஆதிய பிறவும் | | அறிவார் யாம்பகர் அடுக்கு முறைகொடு |
|
|