| “முகட்டளை, கலம்பகம், சமநடை, சமவியம், மட்டவிழ் குழபலினாய் மயூர சமவியம் ஒட்டினார் எழுத்தினால் ஒட்டி ஒண்டமிழ்க்கு இட்டமாய் அவர்கள் வெண்பாவின் பேர்களே”1 என்பது அந்நூற்பா. | 
	| இவ்வாறு பலவகையாகப் பிரித்துக் கூறப்பட்டாலும் அவை அனைத்தையும் ஒரோ வகையால் இவ்வைந்தினுள் அடக்கி விடலாம் என்பது இவர் கருத்து. | 
	| இவர் எதுகையை யாப்பின் இன்றியமையாத அங்கமாகவே கொள்வதால் பல விகற்ப வெண்பாக்களைச் சிறந்தனவாக ஏற்றுக் கொள்வதில்லை, இவரால் இயற்றப்பெற்ற இன்னிசை வெண்பாக்கள் அனைத்துமே - இவ்வுரையாசிரியனின் அறிவுக் கெட்டியவரையில் - ஒரு விகற்பத்தான் இயன்றனவே, எதுகை, மோனை இரண்டுமே உரிய இடத்தில் நன்கு அமைந்தது தான் யாப்பின் சரியான வடிவம் என்பது இவர் கொள்கை. இஃது அடுத்த நூற்பாவில் கூறப்படும். (421) | 
| | 23. | தளைப்பிழை இன்றிப் பொருளொடு திகழுறும் |  |  | வெண்பா மோனையும் எதுகையும் பிறழினும் |  |  | தவிரினும் ஒப்புவர் தக்கோர்; ஆயினும் |  |  | மதுரம் குன்றிடும் என்பது வழக்கே. | 
 | 
	| வெண்டளை பிழையாமல் நல்ல பொருளமைதி வாய்ந்த வெண்பா எதுகை, மோனை ஆகிய இரு தொடை நயங்களும் பெற்று வராதிருப்பினும் பெரியவர்கள் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொள்வர். என்றாலும் அவை இனிமையில் குறைபாடுடையன என்பதே மரபாம் என்றவாறு, (422) | 
| | 24. | குறில்தனி வரும்அசை சீர்ஈற்று அன்றி |  |  | வாரா இயற்கையும், குற்றிய லிகரம் |  |  | கொள்ளலும் தள்ளலும் ஆதிய பிறவும் |  |  | அறிவார் யாம்பகர் அடுக்கு முறைகொடு | 
 | 
|