அறுவகையிலக்கணம்283
கந்தரிட மாமிதனைக் கைபிடித்தார் ஆமாயின்
இந்த வுலகதனுக் கேற்குமோ அம்மானை?
ஏற்குமென்றே கையில்மழு ஏந்தினர்காண்அம்மானை,1
இதில் முதல் இருவரிகள் முதல் பெண் கூறும் செய்தி. அடுத்த இருவரிகள் இரண்டாமவள் எழுப்பும் ஐயம், ஐந்தாம் வரி மூன்றாமவள் இறுக்கும் விடை, மிகப் பெரும்பாலான அம்மானைகள் இவ்வாறே உள்ளன.
(428)
30.அம்மானை ஈற்றின் விடைமொழி யதனுள்
 இருபொருள் காட்டிடல் மிகையாம்; முப்பொருள்
 நாற்பொருள் மொழியினும் இசைவுறில் நலமே,
அம்மானைப் பாட்டில் மூன்றாமவளின் பதிலாக அமைந்துள்ள கடைசிப் பகுதியில் பெரும்பாலும் இருபொருள் அமையும்படி சொல்லாட்சி இருக்கும். அங்கு மூன்று அல்லது நான்கு பொருள்களை அமைத்தாலும் (மிக்க வலிதிற் பொருள் கோடலின்றி) இயல்பாகப் பொருந்தினால் அதுவும் சிறப்புடையதே ஆகும் என்றவாறு,
மாயன் புகழ மலைப்பழனி வாழமுருகோன்
தூயன் குரவன் தொழுகடவுள் அம்மானை;
தூயன் குரவன் தொழுகடவுள் ஆமாகில்
வேயன்ன தோளாரை வேட்பானேன் அம்மானை?
வேட்டவிதம் எண்ணில் வினயங்காண் அம்மானை.2
இதில் ஈற்றிலுள்ள வினயம் என்ற சொல் வில்நயம் என இருசொல்லாகவும், வினயம் என ஒரு சொல்லாகவும் இரு பொருள் படும் பிரிமொழிச் சிலேடை ஆகும். வில்நயம் வீரத்தையம், வினயம் காதலையும் குறித்தது. சூரனை வென்ற வீரத்திற்குப் பரிசாகத் தெய்வயானையையும், தன் காதலால்