யாப்பிலக்கணம்286
கொச்சகக் கலிப்பாவைப் போலப் பாடப்படுகின்ற அம்மானை இழிந்ததாம் எனத் திண்ணமாய்க் கூறலாம் என்றவாறு.
கொச்சகச் சீர் என்றது கலித்தளையால் வருவதனை, அம்மானை எப்போதும் வெண்டளையாலேயே வரவேண்டும். கலி வந்தால் இழிவு என்கிறார்.
(431)
கட்டளைக் கலித்துறை
33.ஈரசை மூன்றசைச் சொற்கள்மிக்கு அணைந்தும்
 ஒவ்வோர் ஈற்றில் தேமாந் தண்பூப்
 புளிமாந் தண்பூப் புணர்ந்தும் ஐஞ்சீர்
 ஆவதோர் அடியாய், நாலடி உடைத்தாய்
 ஈற்றில் ஏஎன முடிவது கட்டளைக்
 கலித்துறை யாம்எனக் கழறுதல் முறையே.
ஈரசை மூவசைச் சீர்களை மிகுதியாகப் பெற்று ஈற்றுச் சீர் சில இடங்களில் மட்டும் தேமாந்தண்பூ அல்லது புளிமாந்தண்பூ என்ற நான்கசைச் சீராக வரும் ஐஞ்சீரடிகள் நான்கு ஏ என முடிந்தால் அது கட்டளைக் கலித்துறை எனப்படும் என்றவாறு,
கட்டளைக் கலித்துறை வெண்டளையால் அமைய வேண்டும் என்பது அதிகாரத்தாற் பெற்றதாம், இப்பாவின் எழுத்து வரையறை அடுத்த நூற்பாவில் கூறப்படும்.
பெரும்பாலான கட்டளைக் கலித்துறையடிகள் காய்ச்சீராலேயே முடியும், எனினும் மிகச்சிறுபான்மை அங்கு நான்கசைச் சீரும் பயின்றுவருதல் உண்டு.
செந்தமிழ்ப் பாடற் புலவோ ரநேகர் தினம்பரவும்
கந்தனைத் தென்பழ னாபுரிக் கோயிலில் காணப்பெற்றால்