மின்னினிடையே செக்கரர விந்தவத னக்கரிய கூந்தலொளி செய்யதிருவே”1 என்பது அதன் இலக்கணம். இலக்கியம் வருமாறு;- |
| மாடகமு றுக்கியிசை பாடுமுனி | | நீடுபினி மாற்றுமுறைமை | | நாடியுரை செய்தலும கிழ்ந்துகழன் | | மன்னவன யந்துபணியா | | கூடியந லன்பினது கூறுவன | | ருந்தவக தம்பநகரில் | | பீடுறவி ருந்தபெரு மானையெவர் | | பூசனைகள் பேணினர்களே ? |
|
இதனால் நான்கு காய்களும் ஒரு கனியும் வந்தவை யனைத்தும் கலிநிலைத்துறை ஆகாமை காண்க, (434) |
36. | கட்டளைக் கலித்துறை கலிநிலைத் துறைஎனும் | | இவற்றின் மோனைக்கு ஈற்றுச் சீர்இசைவு | | என்றுபல் புலவோர் இயம்பினர் அன்றே, |
|
கட்டளைக் கலித்துறை, கலிநிலைத்துறை ஆகிய இரு யாப்பிற்கும் கடைசிச் சீராகிய ஐந்தாம் சீரே மோனை நிற்றற்குப் பொருத்தமானது என்பதால் பல கவிஞர்களும் அவ்வாறே பாடினர் என்றவாறு, |
ஐந்தாம் சீரில் மோனை அமைப்பது ஐந்தசைச் சீர்களா லாகிய நெடிலடிகள் அனைத்திற்கும் பொருந்தும், (435) |
வஞ்சிவிருத்தம் |
37. | ஈரசைச் சீர்மூன்று இரண்டுஇசைந்து ஓர் அடி | | வருவன வஞசி விருத்தம் ஆமே, |
|
ஈரசைச் சீர்கள் மூன்றோ அல்லது இரண்டோ சேர்ந்து ஓரடியாகிய நான்கு அடிகளால் வருவன வஞ்சிவிருத்தம் ஆம் என்றவாறு. |
|