யாப்பிலக்கணம்294
வருபவை பற்பல உள்ளன, இங்கு ஈரசைச்சீரே கூறப்பட்டமையின் அவை காட்டப்பெறவில்லை.
(438)
எண்சீர் வகைகள்
40.கலிவிருத் தம்சில இரட்டித்து எண்சீர்
 விருத்தம், கட்டளைக் கலிப்பா, சிறுநிலைத்
 தாழிசை வரும்எனச் சாற்றிடத் தகுமே,
முன் கூறப்பட்ட அளவடிக் கலிவிருத்தங்கள் இருமடங்காகி எண்சீர் விருத்தம், கட்டளைக் கலிப்பா, குறுந்தாழிசை என்ற வடிவங்கள் ஆகும் எனலாம் என்றவாறு.
இரட்டித்து எண்சீர் என்றதனால் நெடிலடி நீக்கப்பட்டது,
 விதிவ ழாதபல் லுறைப்புடை மறையின்
 மிகக் தாருகா யத்திரி யதனின்
 அதிக மஞ்சமா மந்திர மதனின்
 ஆறி ரெண்டெழுத் ததனிமெட் டெழுத்தாம்
 பதியு மேன்மையெட் டெழுத்தினஞ் செழுத்துக்
 கோடி கோடிமேம் பட்டதஞ் செழுத்தின்
 அதிலு மேகம்ப நாதமா னுத்தான்
 நூறு கோடியின் மிக்கதென் றுணர்வீர்1
மா, விளம், விளம், மா கூடி இரட்டித்த எண்சீர் வகை.
குந்தியங் கொருதினங் கைதொழற் கிரங்கிக்
 கூடியக் கணம்பெருங் கொடைமகற் பயந்தாய்
 செந்திரு நாயகன் சிவன்முதற் பலரும்
 செறிகைநின் னிடையெனுஞ் சீர்த்திசத் தியமேல்
 பந்திய பசுக்கொலைப் பாதகர் குலவேர்
 பறித்திடக் கருதெனைப் பார்த்தறி யாயோ?
 கந்திவண் பொழில்திரு நெல்லையில் தமியேன்
 கருதிய பயன்பெறக் காணுதி விரைந்தே2