அறுவகையிலக்கணம்295
மூன்று விளம் ஒருமா இணைந்து இரட்டித்த எண்சீர் விருத்தம், இவை போல்வன வேறு சிலவும் உள, வந்துழிக்காண்க,
தவள வாரண னாதிய தேவர்போல்
 தகுவர்க் கஞ்சித் தயங்குவை யென்றுனைப்
 புவனி யிற்பலர் சொல்கையி லென்மனம்
 புலருந் துன்பமும் போக்கவெண் ணாய்கொலோ?
 குவடு மூன்று பறித்தெறிந்து ஆடகக்
 குன்றும் நாகர்தம் கோனும்ஒல் கச்செயும்
 பவனன் மைந்தனுக்கு ஒன்பதுஇ லக்கணப்
 பண்பு கூறிய பாற்கர மூர்த்தியே,1
இது கட்டளைக் கலிப்பா, நேர், நிரையில் தொடங்கும் அடிகளுக்கு முறையே பதினொன்று, பனிரெண்டு, பனிரெண்டு எழுத்துகள் வந்தன.
உண்டுண் டுதுயின் றெழுமூ ரவருக்
 குறவா கியுழன் றுமுயன் றுபொருட்
 கொண்டுண் கண்மடந் தையருக் கருள்வோர்
 குன்றக் குடியிற் குறுகப் பெறினும்
 வண்டுண் டகடம் பணியும் புயவேள்
 மறலிக் குமதப் பயலுக் கும்வெறும்
 புண்டுன் றுதலைப் பிரமற் குமனம்
 புலரப் பொருமற் புகழைத் தருமே.2
இது வெண்டளை பெற்ற கலிவிருத்தம் இரட்டியது, இதன் ஓசை விகற்பத்தால் இந்த நூலாசிரியரால் தாழிசை எனப்படுகிறது,
சென்னி யாறுடைச் சிவகு ருப்பிரான்
 செங்கை வேல்வலி்த் தீர வேள்குறக்
 கன்னி தாடொழத் துணியு மோகனக்
 கள்வ னெம்பெருங் கடவு ளென்றறிந்