இது அறுசீர்த்தாழிசை. |
| கருநாட தேய முழுதும்பு ரந்து | | கனவண்மை யுற்ற வரசன் | | பொருவாத வீர சைவத்து ளார்கள் | | போற்றச்சி றந்த புனிதன் | | திருவார்கு மார தேவப்பெ யர்ச்சு | | சீலன்சி வன்ற னருளால் | | ஒரு தாய்வ யிற்று ணுழையாத முத்தி | | உறுமாறு நாடி னனரோ,1 |
|
இது எழுசீர்த்தாழிசை. (440) |
42. | அறுசீர் எழுசீர் இரட்டிய விருத்தப் | | பகுதியும் தாழிசைப் பகுதியும் உளவே.. |
|
அறுசீர் விருத்தங்களும் எழுசீர் விருத்தங்களும் இரட்டித்து முறையே பன்னிரு சீர், பதினான்கு சீர் ஆசிரிய விருத்தங்களாக வரும். இவ்வாறு பன்னிரண்டு, பதினான்கு சீர் பெற்றவற்றுட் சில தம் ஓசை விகற்பத்தால் தாழிசைகள் எனப்படும் என்றவாறு. |
பன்னிரு சீர், பதினான்கு சீர் ஆசிரிய விருத்தங்கள் நன்கு அறியப்படுவனவே, இவர் தாழிசை என்பதற்கு உதாரணம் வருமாறு:- |
மலியுங் கருணை விழியான் வானோர் பரவு பெருமான் |
வடிவேன் முருகக் கடவுண் மயில மலைச்சண் முகவேள் |
ஒலிதங் கியதிண் கழல்சேர் உபய சரணங் கருதி |
உருகித் தொழுமெய் யடியார்க் குரிய பணிகள் புரிவார் |
கலியை மதனை விதியைக் காலன் றனையுண் மதியாற் |
கவலைக் கடலிற் சுழலார் கமழ்செந் தமிழ்முற் றுணர்வார் |
|