| இது அறுசீர்த்தாழிசை. | 
 | கருநாட தேய முழுதும்பு ரந்து  |  |   | கனவண்மை யுற்ற வரசன் |  |   | பொருவாத வீர சைவத்து ளார்கள் |  |   |  போற்றச்சி றந்த புனிதன் |  |   | திருவார்கு மார தேவப்பெ யர்ச்சு |  |   |  சீலன்சி வன்ற னருளால் |  |   | ஒரு தாய்வ யிற்று ணுழையாத முத்தி |  |   |  உறுமாறு நாடி னனரோ,1 |  
  | 
| இது எழுசீர்த்தாழிசை. (440)  | 
| 42. | அறுசீர் எழுசீர் இரட்டிய விருத்தப் |  |   | பகுதியும் தாழிசைப் பகுதியும் உளவே.. |  
  | 
	| அறுசீர் விருத்தங்களும் எழுசீர் விருத்தங்களும் இரட்டித்து முறையே பன்னிரு சீர், பதினான்கு சீர் ஆசிரிய விருத்தங்களாக வரும். இவ்வாறு பன்னிரண்டு, பதினான்கு சீர் பெற்றவற்றுட் சில தம் ஓசை விகற்பத்தால் தாழிசைகள் எனப்படும் என்றவாறு. | 
| பன்னிரு சீர், பதினான்கு சீர் ஆசிரிய விருத்தங்கள் நன்கு அறியப்படுவனவே, இவர் தாழிசை என்பதற்கு உதாரணம் வருமாறு:- | 
| மலியுங் கருணை விழியான் வானோர் பரவு பெருமான் | 
|  வடிவேன் முருகக் கடவுண் மயில மலைச்சண் முகவேள் | 
| ஒலிதங் கியதிண் கழல்சேர் உபய சரணங் கருதி | 
|  உருகித் தொழுமெய் யடியார்க் குரிய பணிகள் புரிவார் | 
| கலியை மதனை விதியைக் காலன் றனையுண் மதியாற் | 
| கவலைக் கடலிற் சுழலார் கமழ்செந் தமிழ்முற் றுணர்வார் | 
|