அறுவகையிலக்கணம்299
புலியைக் கரியை யுரித்தார் போலுஞ் சிலரைப் பணியும்
புனிதச் சமயம் ஆறும் புகழத் திகழ்கின் றவரே,1
இது பெரும்பாலும் வெண்டளை பெற்றுவந்த பன்னிருசீர்த் தாழிசை,
தாதி மாரைவிடு தூது தீதுமிகு
தன்மை கொண்டதென உன்னியே
தத்தை தன்னைவிடி லுற்ற பச்சையுமை
தன்க ரக்கிளியொ டாடுமே
ஓதி மந்தனைவி டுக்கின் முன்பகர்பொய்
   ஓதி மந்தனைநி கர்க்குமால்
   ஓர நாரைகொள்வி கார மார்குரலி
போதி லொன்றுமளி தேன ருந்தியுறு
   போத மங்கழியு மேகமோ
   போயி ணங்குசடை யூடி சைந்துதடை
   பூணு மிங்கெவரை ஏவுவேன்
ஆதி யந்தமுற யானு றுந்துயர்கள்
   ஆன நன்கறியெ னெஞ்சமே
   ஆத ரம்பெருகு பேரை நம்பர்கடி
   தாக வந்திடவி யம்பிடே,2
இது மா, காய் மும்முறைவந்து ஏழாவதாக விளம்பெற்று இரட்டித்த பதினான்குசீர்த்தாழிசை,
(441)
43.ஐஞ்சீர் மேல்வரும் விருத்தம் பலவும்
 ஆசிரி யங்கள்என்று அறைவார் பலரே
ஐந்து சீர்களால் வரும் நெடிலடிக்கு மேற்பட்ட கழிநெடிலடிகளால் வரும் விருத்தங்களைப் பல புலவர்கள் ஆசிரிய விருத்தங்கள் என்று கூறுவார்கள் என்றவாறு.