| புலியைக் கரியை யுரித்தார் போலுஞ் சிலரைப் பணியும் | 
| புனிதச் சமயம் ஆறும் புகழத் திகழ்கின் றவரே,1 | 
| இது பெரும்பாலும் வெண்டளை பெற்றுவந்த பன்னிருசீர்த் தாழிசை, | 
| தாதி மாரைவிடு தூது தீதுமிகு | 
| தன்மை கொண்டதென உன்னியே | 
| தத்தை தன்னைவிடி லுற்ற பச்சையுமை | 
| தன்க ரக்கிளியொ டாடுமே | 
| ஓதி மந்தனைவி டுக்கின் முன்பகர்பொய் | 
|    ஓதி மந்தனைநி கர்க்குமால் | 
|    ஓர நாரைகொள்வி கார மார்குரலி | 
| போதி லொன்றுமளி தேன ருந்தியுறு | 
|    போத மங்கழியு மேகமோ | 
|    போயி ணங்குசடை யூடி சைந்துதடை | 
|    பூணு மிங்கெவரை ஏவுவேன் | 
| ஆதி யந்தமுற யானு றுந்துயர்கள் | 
|    ஆன நன்கறியெ னெஞ்சமே | 
|    ஆத ரம்பெருகு பேரை நம்பர்கடி | 
|    தாக வந்திடவி யம்பிடே,2 | 
| இது மா, காய் மும்முறைவந்து ஏழாவதாக விளம்பெற்று இரட்டித்த பதினான்குசீர்த்தாழிசை, (441)  | 
| 43. | ஐஞ்சீர் மேல்வரும் விருத்தம் பலவும் |  |   | ஆசிரி யங்கள்என்று அறைவார் பலரே |  
  | 
	| ஐந்து சீர்களால் வரும் நெடிலடிக்கு மேற்பட்ட கழிநெடிலடிகளால் வரும் விருத்தங்களைப் பல புலவர்கள் ஆசிரிய விருத்தங்கள் என்று கூறுவார்கள் என்றவாறு. | 
|