அறுவகையிலக்கணம்321
61.இருவகைச் சந்தமும் பிறழும் சிற்சில
 ஐந்தாங் குலம்என்று அறைவது முறையே.
தன்ன, தய்ய ஆகிய இரு சந்தங்களும் சில இடங்களில் மாறுபடும், அவ்வாறு மாறுபடுமிடங்களில் அவற்றை ஐந்தாங்குலத்தைச் சேர்ந்தனவாகக் கொள்ளவேண்டும் என்றவாறு.
“குறிலுடன் இடையினத்து ஒற்றும் மெல்லினத்து உயிர்மெய்யெழுத்தும் ஒன்றினும், அஃதோடு அவற்றின் ஓரொற்று அ ணு கிற்றாயினும் தன்னவும் தய்யவும் பிறழுமன்றே”1 “பொய்மை என்பதும் வர்மம் என்பதும் மெய்ம்மை என்பதும் தன்னவும் தய்யவும் பிறழ்வதன் உதாரணம் என்பர் பெரியோர்”2 என்பன வண்ணத்தியல்பு நூற்பாக்கள்.
(460)
62.தத்தவும் தந்தவும் தாத்தவும் தாந்தவும்
 ஆண்பால் ஆம்என்று அறைவது முறையே,
தத்த, தந்த, தாத்த, தாந்த ஆகிய நான்கு சந்தங்களையும் ஆண்பாற் சந்தங்களாகக் கொள்ளல் தகும் என்றவாறு,
இவை வன்மையான ஒசை உடையனவாதலின் ஆண்பால் என்றார்.
(461)
63.தன்னவும் தய்யவும் தனவும் தானவும்
 பெண்பால் ஆம்எனப் பேசிடல் தகுமே.
தன்ன, தய்ய, தன, தான என்னும் நான்கு சந்தங்களையும் பெண்பாற் சந்தங்கள் எனலாம் என்றவாறு,
இவை மென்மையான ஓசை உடையனவாதலின் இவ்வாறு கூறப்பட்டது.
(462)
64.தானவும், தய்யவும், தன்னவும், பிறழ்வன
 அனைத்தும் அலிப்பால் ஆம்எனல் முறையே.