ஊக்கமும் தொண்டும் நூலின் மேலேற்றிக் கூறப்பட்டன. எவ்வகைக் குற்றமுமின்றி வண்ணம்பாடுதலின் அருமை விளங்க ”உறும்எனில்” என்றார், (480) |
82. | இம்முறை யாவிம்முன் எடுத்துக் காட்டிய | | நூற்பொருள் உணர்ந்துள நுண்ணியர்க்கு உவகையும் | | மற்றவர்க்கு உலவா மயக்கமும் தருமே, |
|
வண்ண இயல்பாகிய இப் பகுதியில் கூறப்பட்டுள்ள இலக்கணங்கள் எல்லாம் வண்ணத்தியல்பு நூலில் கூறப்பட்டுள்ள இலக்கணங்களை ஐயந்திரிபற அறிந்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும், அதனைக் கல்லாதவர்களுக்குத் தீராத குழப்பத்தையும் உண்டாக்கும் என்றவாறு, |
வண்ணத்தியல்பு நூலைத் தெளிவாகக் கற்றுணர்ந்தவர்களுக்கே இப்பகுதி நன்கு விளங்கும். எனவே அதைக் கற்றுணர்ந்த பிறகுதான் இதை ஆராய வேண்டும். இல்லையேல் குழப்பம் உண்டாகும் என்கிறார். (481) |
83. | கருணைக் கடல்எனச் சக்திவேல் என்ன | | வென்றி மழுவெனத் துவக்கிஓர் மூன்று | | வண்ணம் இவற்றினுக்கு இலக்கியம் என்றே | | கருதிக் கூறினம்; மற்றும் பற்பல | | வண்ணமும் வகுப்பும் விருத்தமும் பகர்ந்துளம்; | | அவைகளும் துணையாம் அறியவேண் டுநர்க்கே. |
|
அகப்பொருள் துறைபெற்ற வண்ணத்திற்கு இலக்கியமாகக் கருணைக்கடல், சத்திவேல், வென்றிமழு எனத் தொடங்கும் மூன்று வண்ணங்களை இயற்றியுள்ளோம். இவையேயன்றி வேறு பல வண்ணங்களும், வகுப்புகளும், திருப்புகழ்களும், சந்த விருத்தங்களும் யாத்துள்ளோம். வண்ண இலக்கணத்தைக் கற்கும் ஆவல் உடையவர்களுக்கு அவையும் இலக்கியங்களாகப் பயன்படும் என்றவாறு, |
கருணைக்கடல் - திருவுருமாமலை முருகனைப் போற்றிக் கலவிமகிழ்தல் துறையில் பாடப்பட்ட வண்ணம். “கருணைக் கடலாகிய சங்கரர்” என்ற தொடக்கத்தை உடையது, |