மாமியேசிட நாளுமேதுயில் |
சோகமாதியும் எண்ணியசேய்கொல் |
பாவாணர் வாய்துதித்த தாதையார் |
சித்திமார்மனை சென்றன ராமவர் |
இட்டவேலைபு ரிந்தவர் பூவணை |
மீதிலேவிளை யாடினாரென |
ஓதினார்பலர் என்னசெய்மாறு |
சற்றுவாடினு முன்சகி யாதவர் |
நத்தினாலுமி ணங்குகி லாரெனொ |
டாதிநாளையில் ஆணையாயிரம் |
ஓதினாரிது புண்ணியமோசொல் |
செக்கர்வானொடு திங்களும் ஆழியும் |
மிக்குவேளும்மு னைந்திடும் வேளையில் |
நீயும்வாய்விட லாகுமோசனி |
யானபாவியும் உன்னையொவான்மெய் |
சேராத கேள்வர்நட்ப ராவரோ |
செட்டிபோலஇ ருந்தவர் வேசியர் |
ஒட்டமீவது கண்டனை யேபல |
பாலரீனிய மாதர்தோள்புணர் |
வாரும்வாழ்வுறும் இந்நிலமீது |
கட்டுமீறும்உ டம்புள நான்உனை |
யிட்டுவாடுவ துந்தெரி வாய்ஒரு |
காலம்நீயவர் ஆசையால்மடி |
மீதிலேகொள நன்மொழிகோடி |
செப்புவாயென நம்பினன்; வேதியன் |
இட்டதோர்விதி யென்செயு மோவினி |
வேறுதாரகம் ஏதுநீயல |
தாகையாலொரு நன்னலமோது |
தீராத காதல்வெப்பம் ஆறவே, |
ஒரு வண்ணத்தின் எட்டு தொங்கல்களையும் தனியே வரிசையாகத் தொகுத்தால் அது எதுகை மோனையுடனும் பொருள் தொடர்புடனும் கூடிய சந்தப்பாட்டாக அமையும், அது தொங்கல்களின் தொகுப்பாதலால் தொங்கற்றாழிசை |
|