அறுவகையிலக்கணம்343
அப்படியே அம்மூன்றிற்கும் பொதுவாகத் திகழ்கின்ற வண்ணத்திலும் ஆராய்வது தக்கதாகும் என்றவாறு,
வண்ணத்தை இயல்போல் படித்து மகிழலாம். தாளக் கட்டுடையது ஆதலின் இசைத்தும் இரசிக்கலாம். பாவச்செறிவோடு இருத்தலின் நாட்டியத்திலும் பயன்படுத்தலாம். எனவே இது மூன்றிற்கும் பொதுவாயிற்று.
அணிகெடல் - சொற்பொருள் குற்றத்தையும், குத்தல் - ஓசைக் குற்றத்தையும் சுட்டிநின்றது. இந்நூற்பாவால் தமிழ் யாப்பிலக்கணத்தில் இடம்பெற்றுள்ள இலக்கண இலக்கியக் கொள்கைகள் யாவும் வண்ணத்திற்கும் பொருந்தும் என்பது பெறப்பட்டது.
(484)
86,தமிழ்க்கவி அனைத்தினும் தலையென்று உள்ள
 வண்ண இயல்பினை வகுத்தனம்; மோனை
 இயல்பினைச் சுருக்கி இயம்புகின் றனமே.
தமிழ் யாப்பு வகைகள் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்குகின்ற வண்ண இலக்கணத்தை வகுத்துக் கூறினோம். இனி அடுத்த மோனை இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறுவோம் என்றவாறு.
வண்ணத்தின் இலக்கணத்தை இம்முறையில் முதன்முதல் கண்டவர் இவரே ஆதலின் வகுத்தனம் என்றார். முன்பே மோனை இயல்பு பல நூலாசிரியர்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதாதலின் சுருக்கி இயம்புகின்றனம் என்றார்.
இந் நூற்பாவால் வண்ணவியல்பாகிய இப்பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்த மோனை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது.
(485)
வண்ண இயல்பு முற்றிற்று,
IV. மோனை இயல்பு
மற்ற யாப்பியல் நூல்கள் தொடை எனப் பிரித்துப் பாகுபாடு செய்துகொண்ட மாதிரி இவர் செய்துகொள்ளவில்லை,