அறுவகையிலக்கணம்353
சேர்ந்தால்தான் முழுமையாக ஒலிக்கும். மற்றவற்றுடன் ஒலிக்காது. எனவேதான் ஒலி நயமறிந்த சான்றோர்கள் இந் நான்கை மட்டும் ஆசெதுகையாக ஏற்றனர். ஒலித்தன்மை பற்றி ஏற்கப்பட்டதால் இவர் ஓசைத்தொடை என்கிறார். ஓசைமாறுபாடற்ற தொடை ஓசைத்தொடையாயிற்று.
(500)
102.பாலுக்குக் கூழுக்கு எனப்பகர் பிறவும்
 இனத்தொடை ஆகும்என்று இயம்பினர் சிலரே.
பாலுக்கு, கூழுக்கு என்பனபோன்று இரண்டாவது எழுத்து ஒரே இனத்தைச் சேர்ந்ததாக வந்தால் சிலர் அதை இனஎதுகைத் தொடை என்பர் என்றவாறு.
இனஎதுகை வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை என மூவகைப்படும். நூற்பாவில் இடையின எதுகை காட்டப்பட்டது.
(501)
103.சீருற்ற நீருற்ற எனமிக்கு வருவன
 அலங்கா ரத்தொடை யாமெனத் தகுமே.
சீருற்ற, நீருற்ற என்பற்றைப்போல் மூதற்சீர் முழுவதும் முதலெழுத்தொழிய ஒன்றிவந்தால் அது அலங்கார எதுகை என்று பெயர்பெறத் தகும் என்றவாறு.
பாவின் ஒலி ஒப்பனை செய்யப்பட்டதைப் போன்று கம்பீரமாக விளங்குதலின் அலங்கார எதுகை எனப்பட்டது.
(502)
104.ஆடும் பரிவேலணி பாடும் பணியேபணி
 எனவரல் யாவும் வண்ண எதுகையே.
ஆடும்பரிவேல் அணி, பாடும்பணியே பணி என்பன போல் சந்த ஒசையுடன் வரும் எதுகைகள் வண்ணஎதுகைகளாம் என்றவாறு.
இவ்வெதுகை “தானந் தனனாதன” என்ற சந்தத்தில் வந்தது.