13. | இராகவன் தருமன் முதலினர் தம்மை | | நீதிமன் னவர்க்கு நிகர்சொலல் இயல்பே. |
|
இராமபிரான், தருமபுத்திரர் போன்றவர்களைச் செங்கோல் வழுவாமல் ஆட்சிசெய்யும் அரசர்களுக்கு ஒப்பாகக் கூறலாம் என்றவாறு. (546) |
14. | வீமன் வென்றிவில் விசயன் ஆதியரை | | வீரருக்கு உவமை விளம்பிடல் இனிதே. |
|
வீமன், காண்டீபத்தை உடைய அருச்சுனன் போன்றவர்கள் வீரர்களுடன் இணையாக்கத் தக்கவர்கள் என்றவாறு. |
15. | வணிகர்க்கு அளகைக் காவலன் தன்னை | | உவமை கூறிடல் உத்தமம் ஆமே. |
|
பெரிய வியாபாரிகளுக்கு அளகாபுரியின் வேந்தனாகிய குபேரனை ஒப்பிட்டுக்கூறுதல் சிறப்பாம் என்றவாறு. (548) |
16. | முளைகொணர்ந்து அடிசில் இட்டோன் மூர்த்தி | | சடையன் ஆதியர் சதுர்த்தர்க்கு உவமையே. |
|
வித்திய முளைவாரி இரவில் விருந்து படைத்த இளையான் குடி மாற நாயனார், மூர்த்தி நாயனார், திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் போன்றவர்களை வேளாளர்களுக்கு உவமை கூறுதல் மரபாம் என்றவாறு. |
வணிகர் குலத்தே தோன்றி மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனாரை வேளாளர்களுக்கு உவமையாகக் கூறுவதன் காரணம் விளங்கவில்லை. (549) |
17. | மிடிஅறக் கொடுக்கும் வீறுஉடை ஒருவனைக் | | கன்னன்ஆ தியர்க்குஇணை கழறலும், அன்றி | | அரன், அரி குகவேள் அனையான் எனினும் | | முத்தமிழ்ப் புலவோர் முனியார் அன்றே. |
|