| “கொன்றைக் கனி,கல் லார்மனமும், | | கூந்தற் கமுகும் பொதுமாது | | தன்றன் இதயம் சூல்மேகம் | | சவரி கருமை யடர்கங்குல் | | மன்றல் கமழும் அஞ்சனிப்பூ, | | வயங்குஞ் சிறைவண் டினம் சோலை, | | துன்றல் வரும்பைம் புனல்கொழிக்கும் | | தூய அறல், இந்திரநீலம்” | | “இருள்சை வலம்ஆம் மூவைந்தும் | | ...தகரக் குழலுக்கு இணையாமே.”1 |
|
என்பது இங்கு ஒப்பிடத்தக்கது. |
இவ்வுவமைஇயல்பில் மகளிரின் உறுப்புகளுக்கு மட்டுமன்றி ஆடவர்களின் அங்கங்களுக்கும் உவமை கூறப்படுகிறது. |
19. | நெடுமால் அனையான் நெற்றி நிமிர்பிறை | | செந்திரு அன்னாள் சிறுநுதல் ஏனையே. |
|
திருமாலைப் போன்று சிறந்து விளங்குகின்ற ஆண்மகனின் நுதல் நேராகஉள்ள பிறைச்சந்திரன்போல் விளங்கும். எழிலிற் சிறந்து திருமகளை நிகர்த்த பெண்ணின் நெற்றி வடிவில் சிறுத்தும், வளைந்த பிறைமதியைப் போன்றும் தோன்றும் என்றவாறு. |
இதனாலேயே ஆடவரிற் சிறந்தாருக்குத் திருமாலும், பெண்களிற் பெருமையுடையார்க்குத் திருவும் உவமை ஆவர் என்பதும் பெறப்பட்டது. இதில்நிமிர்பிறை என்பது இல்பொருளுவமையின் பாற்படும். மகளிர்க்குச் சிறுநுதல் என்றதால் அருத்தாபத்தியாக ஆடவர்க்கு அகன்ற நெற்றியே சிறப்பு என்பதுவும் பெறப்பட்டது. (552) |
20. | விற்பொரு புருவமும், விதுவொடு கமலமும் | | அன்னமா முகமும் அவன்அவள் பொதுவே. |
|
|