வில்லைப்போன்று வளைந்த புருவங்கள், சந்திரனையும் தாமரையையும் நிகர்த்த அழகிய வதனம் என்னும் இரண்டும் ஆடவர் மகளிர் என்னும் இருபாலார்க்கும் பொதுவானவையாம் என்றவாறு. |
இங்கு விது என்றது முழுத்திங்களை. (553) |
21. | காகமூக்கு என்னக் கவின்தரு புருவமும் | | போர்விடைக் கண்ணும் புருடர்க்கு உரியவே. |
|
காக்கையின் அலகைப்போன்று விளங்கும் புருவங்களும், போர்க்குணமுடையகாளையின் கண்களைப் போன்ற விழிகளும் ஆடவர்க்குச் சிறப்பாக உரியனவாகும் என்றவாறு. |
முன் நூற்பாவில் வில்லைப் புருவத்திற்கு உவமை கூறியது வளைவுபற்றி, இந் நூற்பாவில் பருமை, நுனியிற் செல்லச் செல்லச் சிறுத்தல், ஒளி ஆகியவை பற்றிக் காகத்தின் அலகுடன் நிகராக்கப்படுகிறது. (554) |
22. | கரும்பொடு வாள்எனக் கவின்தரு புருவமும் | | கணைவேல், உற்பலம், கயல்பொரு கண்ணும் | | கோதையர்க்கு அன்றிக் கூறஒண் ணாதே, |
|
மாரனின் கரும்புவில்லைப்போன்றும், வாளைப்போன்றும் விளங்குகின்ற புருவங்கள் எனவும், அம்பு, வேலாயுதம், குவளைமலர், மீன் இவைகளைப் போன்ற விழிகள் எனவும் பெண்களுக்குத்தான் கூறலாமேயன்றி ஆடவர்க்குக் கூறலாகாது என்றவாறு. |
கரும்பு ஆகுபெயராக மன்மதனின் வில்லை உணர்த்திற்று. முன்னே 20 ஆம் நூற்பாவில் பொதுவாக வில்லை இருபாலார்க்கும் கூறிய ஆசிரியர் இங்கு மெலிந்த கரும்பு வில்லை மகளிர் புருவத்திற்குச சிறப்புவமையாகக் கூறுகிறார். (555) |
23. | பெண்கொடி நாசியின் பேர்எழிற்கு இணைஎனச் | | சண்பக மலரையும் சாற்றுநர் சிலரே. |
|