| கொடியைப் போன்ற மங்கையின் மூக்கினுடைய நல்ல அழகிற்கு நிகர்த்ததாகச் சில புலவர் சண்பக மலரையும் கூறுவர் என்றவாறு. | 
	| மலரையும் என்றதிலுள்ள உம்மை இந்நூல் 287ஆம் நூற்பாவில் கூறப்பட்ட எட்பூவைத் தழுவியது. (556)  | 
	| 24. | கன்னிதன் கவுட்குஇணை ஆடியும், காதிற்கு	 |  |   | ஊசல்கத் திரிக்கோல் வள்ளைக் கொடியும்	 |  |   | கூறுநர் பற்பலர் குவலயத்து உளரே. |  
  | 
	| மங்கையரின் கன்னத்திற்குக் கண்ணாடியையும், செவிகளுக்கு ஊசல், கத்திரி, வள்ளைக்கொடி ஆகியனவற்றையும் உவமையாகக் கூறும் பாவலர் பற்பலர் என்றவாறு. | 
	| வள்ளைக்கொடியும் என்பதிலுள்ள உம்மையை ஊசல் கத்தரிக்கோல் ஆகிய இரண்டுடனும் கூட்டுக. இம் மூன்று உவமைகளையே இரத்தினச் சுருக்கம், “தழைகாது கத்தரிகை பொற்புவள்ளை ஊசல் புகல்”1 "எனக் கூறுகிறது. (557)  | 
| 25. | கொவ்வையில் வீழியில் குலவுசெங் கனிகளும் |  |   | பவளமும் இதழ்க்குஇணை பகர்ந்தனர் பாவலர். |  
  | 
	| கொவ்வைப்பழம், விழுதிக்கனி, பவளம் ஆகியனவற்றை உதடுகளுக்கு உவமையாகக் கூறுவார்கள் என்றவாறு. | 
	| இந்நூற்பா ஆடவர், மகளிர் எனப் பிரித்துக் கூறாததால் இருவருக்கும் பொதுவாகக் கொள்க. ஆடவர்களின் இதழ்களுக்கும், “திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ”2 “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்”3" என இவை உவமை ஆனமை காண்க.  (558)  | 
 | 
| 26. | முருந்தும் மாதளை அரிசியும் முல்லை |  |   | அரும்பும் நகைக்குஇணை ஆவது முறையே. |  
  | 
|