| “வல்லுச் சக்ர வாகம்மதன் | | | மகுடம் எலுமிச் சங்கனிபூண் | | | வில்வக் கனிமாங் கனிதேங்காய் | | | விளவின் கனிகோ புரத்தூபி | | | சொல்வெற்பு இளநீர் கதலிப்பூச் | | | சொர்ணத் தாளஞ் சிவலிங்கம் | | | தெல்லுக் கரகம் கோங்கரும்பு | | | சிமிழ்பம் பரம்பொற் குடம்கிண்ணம்” |
|
| “செண்டு குமிழ்வார் கூடாரம் | | | சேவின் சிமிழ்பொற் கரண்டகம்மென் | | | புண்ட ரீகம் முகிழ்பந்து | | | புன்னைக் காய்மா துளங்கனி மேற் | | | கொண்ட மொக்குள் பிடிசெம்பு | | | கொட்டைப் பாக்குப் பரிதிமதி | | | மிண்டும் இபமத் தகம்மருப்பு | | | மெழுகின் உருண்டை பசும்பொற்றேர் | | | “படர்ந்த செப்பு மாவிலிங்கம் | | | பழம்ஆறு ஏழும்”1" |
|
| எனக் கூறப்பெற்றனவற்றை. (563) |
| 31. | எறும்புஒழுக்கு இருப்புச் சலாகை போலும் | | | உரோமத்து அணிஉறும்; உந்திநீர்ச் சுழி; ஆல் | | | இலைவயிறு என்றிடல் ஏந்திழைக்கு இசைவே. |
|
| எறும்புகள் ஊர்ந்து செல்லும் வரிசையையும், இரும்புச் சங்கிலியையும் மகளிரின் உதரத்தில் உள்ள மயிரொழுங்கிற்கும், நீர்ச்சுழியைக் கொப்பூழிற்கும், ஆலிலையை வயிற்றிற்கும் உவமையாகக் கூறினால் பொருத்தமாக இருக்கும் என்றவாறு |
| “மயிர்வரி யோலமிடும் வண்டொழுகு எறும்பொழுகு சங்கிலி உறும்கரி பிணித்ததறியே நீலமணி சைவலம் அணுத்திரள் |
|