வெளிச்சமலர் நாளமும் நிலைபெறுமரோ”1" என்பது பிரபந்தத் திரட்டு. (564) |
32. | மென்தோட் பேதைதன் முதுகினை வெருகந் | | தளிர்எனச் சாற்றலும் தக்க இயல்பே. |
|
மிருதுவான தோள்களையுடைய மங்கையின் முதுகிற்கு வெண்கிடைச் செடியின் தளிரை உவமை கூறுதல் சரியான மரபாம் என்றவாறு. (565) |
33. | மலைஎன, எழுஎன வழங்கும் தோள்களும் | | பாயல் ஆம்எனப் படர்தரு மார்பமும் | | காளையர்க்கு உரித்துஎனக் கழறினர் கற்றோர். |
|
கற்றறிந்த பாவலர்கள் குன்றுகள் எனவும், எஃகு எனவும் சொல்லப்படுகின்ற புயங்களும், படுக்கையைப் போன்று பரந்து அகன்றுள்ள மார்பும் வாலிபர்களுக்கு உரியன என்று கூறியுள்ளனர் என்றவாறு. (566) |
34. | யாழ்எனும் முன்கையும், கெளிறொடு பயற்றங் | | காய்பொரு விரல்களும், காந்தள் மலர்நிகர் | | அங்கையும், கிளிமூக்கு அன்னகூர் உகிரும் | | நங்கையர்க்கு உரித்துஎன நவின்றனர் நாவலர். |
|
யாழைப்போன்ற முன்கரமும், கெளிற்றுமீன் மற்றும் பயற்றங்காய் போன்ற கைவிரல்களும், காந்தள் பூவைப்போன்ற உள்ளங்கைகளும், கிளியின் அலகை நிகர்த்த கூரிய நகங்களும் கன்னியர்க்கு உரியன என்பர் புலவர் என்றவாறு. (567) |
35. | மேகமும், நிதிகளும், விண்ணூர்த் தருவும், | | சிந்தா மணியும், தேனுவும் தெய்வமும் | | தினந்தொறுங் கொடுப்போன் செங்கைக்கு இணையே. |
|
முகிலும், சங்கம் பதுமம் முதலிய நிதிகளும், வானுலகில் உள்ள கற்பக மரமும், வேண்டியதை எல்லாம் கொடுக்கும் |
|