என்னை? |
| “அகத்தி அரும்பு வாசிகையும் | | அணுகக் குனிக்கும் பூஞ்சிலையும் | | பகுத்த பிறையும் கொக்கிறகும் | | பகரும் நுதலுக்கு இணையாகும்”1 |
|
ஆதலின். உவமையாக உயர்ந்த பொருள்களே கூறப்பட வேண்டும் என்பது மரபு. “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”2 என்ற பண்டையோர் கண்ட நெறி இங்கு மீண்டும் வற்புறுத்தப்பட்டது. (574) |
42. | பொருந்தக் கூறிய புத்துவ மைச்சொல் | | தழுவும்நா வலரும் தமர்ஆம் எமக்கே. |
|
எக் கவிஞராலும் கையாளப்படாமல்உள்ள ஒரு புதிய உவமையானாலும் அது பொருளுக்கும் இலக்கிய மரபிற்கும் இசைந்ததாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் புலவர்கள் எம் இனத்தவர் ஆவர் என்றவாறு. |
மரபு வழு இன்றிப் புதிய உவமைகளைப் படைப்பவர்கள் எமக்கினியர் என்கிறார். இதனால் படைப்பாளியின் மனோதர்மத்தைச் சிறைப்படுத்தும் தளைகள் வேண்டா என்றாராயிற்று. (575) |
43. | நிகழ்த்தரும் கடவுள் நீதியும் கருணையும் | | இரவியும் மதியும் போலும் என்றும், | | இயல்உமை இசைதிரு நாடகம் நாமகள் | | அனையன என்றும், அம்பரப் பெயர்கொடு | | கருநிறம் உடைத்தாய் மீனொடு காண்டலில் | | புணரியும் வானும் புரையும் என்றும், | | பற்பல் விதமாப் பகராது உவமை | | இயல்பினைப் பகர்தரும் இந்தமட்டு அடக்கி | | உடைமை இயல்பும் உரைக்குதும் சிறிதே. |
|
|