| என்னை? | 
 | “அகத்தி அரும்பு வாசிகையும்	 |  |   | அணுகக் குனிக்கும் பூஞ்சிலையும் |  |   | பகுத்த பிறையும் கொக்கிறகும்	 |  |   | பகரும் நுதலுக்கு இணையாகும்”1 |  
  | 
| ஆதலின். உவமையாக உயர்ந்த பொருள்களே கூறப்பட வேண்டும் என்பது மரபு. “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”2 என்ற	பண்டையோர் கண்ட நெறி இங்கு மீண்டும் வற்புறுத்தப்பட்டது. (574)  | 
| 42. | பொருந்தக் கூறிய புத்துவ மைச்சொல் |  |   | தழுவும்நா வலரும் தமர்ஆம் எமக்கே. |  
  | 
	| எக் கவிஞராலும் கையாளப்படாமல்உள்ள ஒரு புதிய உவமையானாலும் அது பொருளுக்கும் இலக்கிய மரபிற்கும் இசைந்ததாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் புலவர்கள் எம் இனத்தவர் ஆவர் என்றவாறு. | 
	| மரபு வழு இன்றிப் புதிய உவமைகளைப் படைப்பவர்கள் எமக்கினியர் என்கிறார். இதனால் படைப்பாளியின் மனோதர்மத்தைச் சிறைப்படுத்தும் தளைகள் வேண்டா என்றாராயிற்று. (575)  | 
| 43. | நிகழ்த்தரும் கடவுள் நீதியும் கருணையும் |  |   | இரவியும் மதியும் போலும் என்றும், |  |   | இயல்உமை இசைதிரு நாடகம் நாமகள் |  |   | அனையன என்றும், அம்பரப் பெயர்கொடு |  |   | கருநிறம் உடைத்தாய் மீனொடு காண்டலில் |  |   | புணரியும் வானும் புரையும் என்றும், |  |   | பற்பல் விதமாப் பகராது உவமை |  |   | இயல்பினைப் பகர்தரும் இந்தமட்டு அடக்கி |  |   | உடைமை இயல்பும் உரைக்குதும் சிறிதே. |  
  | 
|